என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Obituary"

    • பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.
    • அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

    கர்நாடகாவில் வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.

    அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால், அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    • பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.
    • கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபய துல்லா.

    தஞ்சாவூா்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    தி.மு.க. முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த உபயதுல்லா, என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர்.

    1962-ம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞரின் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர்.

    மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.

    1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா. 4 முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய உபயதுல்லா 2006-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் வணிக வரித்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தார்.

    கலைஞர்மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா 30 ஆண்டு களுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.

    இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அர சின் "பேரறிஞர் அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

    கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபய துல்லா. கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய உபயதுல்லாவின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.

    உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
    • 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்தவர் இன்னசென்ட்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். 1972-ம் ஆண்டு ஷோபனா பரமேஸ்வரன் நாயர் தயாரிப்பில் ஏ.பி.ராஜ் இயக்கிய நிருதசாலா படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

    அதன்பின்பு குணச்சித்திர வேடங்களிலும், நகை ச்சுவை நடிப்பிலும் கொடிகட்டி பறந்தார். 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.

    இன்னசென்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மெல்ல, மெல்ல நோயில் இருந்து மீண்டார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இன்னசென்டை உறவினர்கள் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னசென்டுக்கு நேற்றிரவு சுவாச பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் இன்னசென்ட் மரணம் அடைந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வயது 75.

    இன்னசென்ட் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்றனர். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் இன்னசென்ட் உடல் இன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர், நடிகைகள், ரசிகர்கள், சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்பு இன்னசென்ட் உடல் அவரது சொந்த ஊரான இரிஞ்சாலகுடாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு தாமஸ் பேராலயத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மரணம் அடைந்த நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆவார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அப்போது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    நடிகர் இன்னசென்ட் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இன்னசென்டின் மறைவு கேரளாவுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னசென்ட் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இன்னசென்ட் இறந்தாலும் அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என மோகன்லால் கூறியுள்ளார். 

    • கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.
    • நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    கோவை சரக டிஐஜியும், நாகை மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுமான விஜயகுமார் நேற்று உயிரிழந்தார்.

    அவருக்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அலுவலகத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    அவரின் ஆன்மா சாந்தியடைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ்சிங் தலைமையில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து டிஜஜி விஜயகுமார் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் விஜயகுமார் திரு உருவ படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.
    • கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன்.

    சென்னை:

    தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டிக் காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தி கேட்டுத் துடி துடித்து போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.

    இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்க் கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறை வாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கலைஞரோடும் சிறையில் வாடியவர் அவர்.

    கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

    பரந்து விரிந்த ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் செயலாளராக அவர் இருந்தபோது, அந்த மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும். அந்த மாவட்டத்தில் இருந்த ஒவ்வொரு ஊரிலும்-வீட்டிலும் தனது காலடித் தடத்தை பதிய வைத்து விட்டே வீடு திரும்புவார் அவர்.

    இப்படி கழகப் பணிகளே தன் உயிர் மூச்சென வாழ்ந்த அவர், உடல் நலிவுற்று இருந்த போதும் என்னைக் காண அண்ணா அறிவாலயம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை மருத்துவமனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, ஓய்வெடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ, தான் விரைவில் நலம்பெற்று அடுத்த கழக நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்றார். இப்படி எந்நேரமும் கழகமே அவரது சிந்தையில் நிறைந்திருந்தது.

    இத்தகைய அர்ப்பணிப் புணர்வாலும் ஆற்றல்மிக்க அவரது செயல்பாடுகளாலும், கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றிய கழக செயலாளராக, மாவட்ட கழக செயலாளராக, இரு முறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும்.

    கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன்.

    கும்மிடிப்பூண்டி வேணுவின் பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்.
    • தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன்.

    மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்; பழகு தற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.

    தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

    அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    பர்டுபிஸ்:

    செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக்கிலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் பர்டுபிஸ் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    இந்த ரெயில் ஸ்லோவாக்கியாவின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரைன் நகரான சோப் நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக செக்குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் பியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ரெயில்கள் மோதிக்கொண்டது மிகவும் துரதிஷ்ட வசமானது. விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    • 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

    ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஆன்மீக சத்சங்க நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகள் என்று கூறியுள்ளார்.

    • கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது.
    • பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார்.

    பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற இயற்கை விவசாயியுமான கமலா பூஜாரி. அவருக்கு வயது 74, அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயால் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த கமலா பூஜாரி சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

    கோராபுட் மாவட்டத்தில் உள்ள பைபரிகுடா தொகுதியின் பத்ராபுட் கிராமத்தில் பிறந்த பூஜாரி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும், 100 வகையான அரிசிகளை அறுவடை செய்தவராகவும் இருந்தார். அவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.

    அவருக்கு 2019 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் 2018 ஆம் ஆண்டில் மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராக இருந்தார் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருதைப் பெற்றார்.

    2002 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 'ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருதை' வென்றார்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மோகன் சரண் மாஜி, அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்தார். பூஜாரியின் மகன் தங்கதர் பூஜாரியிடமும் மாஜி தொலைபேசியில் பேசினார்.

    "விவசாயத் துறையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று ஒடிசா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,

    கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விவசாயத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்தார், குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல். நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பணி பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும். பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.

    • மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்த மாஸ்டர் மாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு உயிரிழந்தார். மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மாஸ்டர் மாதன் மறைவையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

    பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன்

    நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கும். நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். நீலகிரி தேயிலைத் தோட்டப் பிரச்சினைகளுக்கும், மலைப்பகுதிகளில், மனித விலங்கு மோதல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டவர். கடின உழைப்பாளர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர். அவரது மறைவு, தமிழக பாஜகவுக்குப் பேரிழப்பாகும்.

    இன்று, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம். நாளைய தினம், தமிழகம் முழுவதும், தமிழக பாஜக மாவட்ட அலுவலகங்களில், மாஸ்டர் மாதன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும்.

    மாஸ்டர் மாதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும். ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
    • எப்போது கோவைக்கு சென்றாலும், இரா.மோகனை சந்திக்கத் தவறியதில்லை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவப் பருவத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 13 வயதிலேயே நகர்மன்றத் தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, கழக வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.

    முத்தமிழறிஞர் கலைஞர் பேரன்பிற்குப் பாத்திரமான அவர், 1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989-ம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, தன்னுடைய தொண்டால் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.

    கொள்கை மறவராக வாழ்ந்த இரா.மோகனுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், "அண்ணா விருது" வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன்.

    நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், இரா.மோகனைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன். இரா. மோகன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    ×