search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SHOP CLOSURE"

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    கூடலூர் அடுத்த கொளப்பள்ளியை சேவீர் மட்டத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 4 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். நேற்று சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர்மறைவில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள், சிறுத்தையை சத்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.

    தொடர்ந்து காயம் அடைந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை பந்தலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.
    • சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை மூலம் 10-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு வாய்க்கால்கள் மூலம் விவசாயத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஒருதரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் இந்த திட்டம் செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக கூறினர்.

    இதுதொடர்பாக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தையும் அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 6-ந்தேதி இரவு 1 மணி வரை பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. மறுநாள் 7-ந்தேதி விவசாயிகளிடம் கலெக்டரும் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி அன்று மாலையே விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையம் என்ற பகுதியில் தொடங்கினர்.

    போராட்டத்தில் 25 விவசாயிகள் கலந்து கொண்டு விடிய, விடிய உண்ணாவிரத பந்தலிலே படுத்து தூங்கினர்.

    விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று விசைத்தறிகள் மூடப்படும் என்று அறிவித்தனர்.

    இதையடுத்து சென்னிமலை வட்டாரத்தில் இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது, சென்னிமலை டவுன் மற்றும் வெள்ளோடு, ஈங்கூர் மற்றும் கிராம புறங்களிலும் மளிகை, காய்கறி கடை, பால் கடை, பைக் ஒர்க்ஷாப், உரக்கடை, டீ கடைகள் உள்பட சிறிய பெட்டிகடை முதல், பெரிய டிபாட்மெண்டல் ஸ்டோர் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

    விவசாயிகள் போராட்டத்திற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை மூடி உள்ளனர். மருத்து கடைகள் மட்டும் செயல்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னிமலை பால்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பால் கடைகளும் இயங்காது என அறிவித்துள்ளனர்.

    இதேபோல் சென்னிமலை பகுதியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகளும் இயங்கவில்லை. இதனால் ரோடுகளில் ஆள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, சென்னிமலை வட்டாரத்தில் முழு கடையடைப்பு நடக்கிறது. ஆனால் பிரதம கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வழக்கம் போல் இயங்கின.

    இதேபோல் பெருந்துறை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போலீஸ் நிலையம் ரோடு, ஈரோடு, பவானி, கோவை, சென்னிமலை செல்லும் சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டும் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் சேனிடோரியம், சென்னிவலசு, காஞ்சிக்கோவில், துடுப்பதி, சீனாபுரம், பீரங்கிமேடு, சிப்காட் பகுதி ஆகிய பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. கடைகள் அடைப்பு காரணமாக சென்னிமலை, பெருந்துறை பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சி, கரட்டுப்பாளையம் ஊராட்சி, குருமந்தூர், கோட்டுகுள்ளாம்பாளையம், நம்பியூர் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    • கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தன மாக நடைபெறுவதை கண்டித்து நடத்தப்படுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி கடை வீதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்த தாரர் அலட்சிய போக்கை கண்டித்து கடை யடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியா வூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொரு ளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

    கூட்டத்தில் விக்கிர வாண்டி கடைவீதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம் பங்கள் மாற்றியமைக்கும் பணிக்கு நியமனம் செய்யப் பட்ட ஒப்பந்ததார் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தனமாக நடைபெறுவதை கண்டித்தும், தினமும் வயதான முதியோர்கள், பொதுமக்கள் சாலையில் விழுந்து அடிபட்டு பாதிக்கப் படுவதை கண்டித்தும் வரும் மே 3-ந் தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை மூடி கண்டன ஆர்பாட்டம் செய்வது எனவும், மே 5-ந் தேதி வணிகர் தினத்தன்று கடை விடுமுறை விட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றினர். இதில் சங்க துணைத் தலைவர்கள் மணி வண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமார கிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • சாலை சீரமைப்பு பணியில் தொய்வு கண்டித்து
    • பொதுமக்கள் உண்ணாவிரதம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா திரு–வரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலை–கள் சீரமைப்பு பணி நடை–பெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற–வில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின் றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவ–தாக அப்பகுதியில் போஸ் டர் ஒட்டப்பட்டது. அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நூற் றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறை–வேறும் வரை உண்ணா–விரத பந்தலை விட்டு வெளியே செல்ல–மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது–மக்க–ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–பட்டுள்ளனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத் தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    • புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
    • அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

    மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.

    பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.

    • அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
    • கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.

    ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.

    இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.

    இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    • ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    • குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

    பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

    இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் தேர்தல், மகாசபை கூட்டம் ஆகியன நாளை (14-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

    இதனால் நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு உடன்குடி சங்கத் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • கரூரில் நாளை முழு கடையடைப்பு நடைபெற உள்ளது
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து

    கரூர்:

    ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள், கடைகள், மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், மண்டி கடைகள் நாளை முழு கடையடைப்பு செய்கின்றன. மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதித்திருப்பது சாமான்ய மககளை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்கம், உணவு தானிய மண்டி (வணிக வளாகம்) கரூர், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லரை வியாபாரங்கள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய மண்டி (வணிக வளாகம்) ஆகிய நிறுவனங்கள் நாளை (16-ந் தேதி) ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. 

    ×