search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road widening work"

    • திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து வயர்லெஸ் சாலையை ரூ. 11 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிடப்பட்டது.

    மேலும் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிக்காக இந்திய விமான நிலைய ஆணையத்தை மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியது. இருப்பினும் அவர்களிடமிருந்து பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

    திருச்சி -புதுக்கோட்டை சாலையை இணைக்கும் இந்த வயர்லெஸ் ரோடு 1.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது.தேசிய நெடுஞ்சாலை மற்றும் காஜாமலை மெயின் ரோடு அருகே கே.கே. நகர் பேருந்து நிலையம் மற்றும் சாத்தனூர் மெயின் ரோடு, திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றையும் இணைக்கிறது.

    தற்போது 65 அடி அகலத்தில் இருக்கும் வயர்லெஸ் சாலை சென்டர் மீடியனுடன் 100 அடி சாலையாக விரிவுபடுத்த முதற்கட்டமாக மாநகராட்சி ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை- உடையான் பட்டி மெயின் ரோடு இடையே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாநகராட்சி விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது,

    சாலை விரிவாக்க பணிகளுக்கு முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கப்படும். அகற்றாவிட்டால் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை அகற்றும்.

    இந்த சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யும்போது அப்பகுதியில் நிலவும் நெரிசல்கள் பெருமளவு குறையும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மழை நீர் வடிகால்கள் மற்றும் பாதசாரி தளங்களும் அமைக்கப்பட உள்ளது.

    • ரூ.71.15 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டது
    • நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது

    வேலூர்:

    வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் நவீன வசதிகளுடன் விமான நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் 120 ஏக்கர் பரப்பளவில் சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக விமான ஓடுதளம், தகவல் மற்றும் தொலை தொடர்பு கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், தங்கும் விடுதி, கார் பார்க்கிங், ஹோட்டல், பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறை உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வே விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்-தார்சாலை வருவதால் அந்த சாலை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    அதற்கு மாற்றாக விமான நிலையத்தின் அருகே ரூ.71.15 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது. தற்போது, விமான நிலையத்திற்கு தடுப்பு வேலி, உள்ளிட்ட அடிப்படை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், விமான நிலையத்திற்கு செல்லும் சாலை, இரு வழி சாலையாக உள்ளது.

    விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்லும் என்பதால், 2 வழி சாலையை, 4 வழி சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலை துறை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, 4 வழி சாலையாக மாற்ற ரூ.71.80 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    • கடையடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
    • கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தன மாக நடைபெறுவதை கண்டித்து நடத்தப்படுகிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி கடை வீதியில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி ஒப்பந்த தாரர் அலட்சிய போக்கை கண்டித்து கடை யடைப்பு போராட்டம் நடத்த வர்த்தகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். விக்கிரவாண்டியில் நடந்த வர்த்தகர் சங்க கூட்டத்திற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியா வூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொரு ளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

    கூட்டத்தில் விக்கிர வாண்டி கடைவீதியில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம் பங்கள் மாற்றியமைக்கும் பணிக்கு நியமனம் செய்யப் பட்ட ஒப்பந்ததார் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக பணி மெத்தனமாக நடைபெறுவதை கண்டித்தும், தினமும் வயதான முதியோர்கள், பொதுமக்கள் சாலையில் விழுந்து அடிபட்டு பாதிக்கப் படுவதை கண்டித்தும் வரும் மே 3-ந் தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை மூடி கண்டன ஆர்பாட்டம் செய்வது எனவும், மே 5-ந் தேதி வணிகர் தினத்தன்று கடை விடுமுறை விட்டு ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறை வேற்றினர். இதில் சங்க துணைத் தலைவர்கள் மணி வண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமார கிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலுார்:

    வேலுாரில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும், சேலம், பெங்களூர், சென்னை இணைப்பு பகுதியானதால் அனைத்து வாகனங்களும் வேலுார் வழியாகவே செல்கின்றன.

    இதனால், நகரின் இதயப்பகுதியான கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இதனால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதை தடுக்கவேண்டும், நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவியாய் தவித்தனர்.

    இதையடுத்து, கடந்த ஆண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் முற்றுகையிடுவதை தடுக்க, சர்வீஸ் லைன்களில் திருப்பி விடப்பட்டன. ஆனால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

    ஏனெனில், சர்வீஸ் சாலையில் மெக்கானிக் ஷெட்டுகள் அதிகளவில் இருப்பதால், வாகன போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது. இதை தவிர்க்க, இப்போது போக்குவரத்து நடக்கும் கிரீன் சர்க்கிள் பகுதியிலிருந்து சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வரையும், அங்கிருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள சர்வீஸ் லைன்கள் இப்போது உள்ள 5 மீட்டர் அகலத்தை 8.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால், போக்குவரத்து எளிதாகும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார். கடந்த ஆகஸ்டு மாதமே அதற்கான பணிகள் தொடங்கும் என கூறியிருந்தார்.

    ஆனால், இன்று வரை அதற்கான எந்த பணிகளுக்கான முகாந்திரமும் தென்படவில்லை. இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பது, சர்வீஸ் லைன் அகலத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு ஸ்கெட்ச் போட்டு தந்தோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (நகாய்) பங்கு வருகிறது. அதனால், அந்த திட்ட அறிக்கையை நகாய் ரீஜினல் ஆபீசருக்கு அனுப்பினோம். பலமுறை தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறோம்.

    வேலுார் வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சரிடமும் இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அவர் 'டெக்னிக்கல்' ரிப்போர்ட் வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உடனடியாக சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்க முயற்சித்து வருகிறோம்' என்றார்.

    • லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, போடி, ராமேஸ்வரம், சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, ஊட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை பணியில் சாலையை அகலப்படுத்தும் போது சிறு பாலங்கள், தடுப்புச் சாலைகள் அமை க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் அமைப்பதற்காக ஆங்கா ங்கே குழிகள் தோண்டி வேலை நடைபெற்று வருகிறது.

    பணிகள் விரைவில் முடிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழிகள் தோண்டிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும், தடுப்புகளும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் குழிகளில் விழுந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது, போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பிற்காலங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் இந்த 4 வழிச்சாலை அமை க்கும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த சாலையில் சென்டர் மிடியன்கள் அமைக்க ப்பட்டிருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சென்டர் மிடியனை அகற்றிய பின்பு புழுதிகள், தூசிகள் கிளம்பி வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    மேலும் உணவகங்கள், பேக்கரி, டீ கடையில், பழக்கடைகள், சாலையோர வியாபாரிகள், காய்கறி கடைகள் அனைத்திலும் தூசிகள் படிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலையில் இடிபட்ட கட்டிட கழிவுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும். மேலும் பாலம் கட்டும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
    • கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமாக விளங்கி வருவது ஊட்டி.

    சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாகவே அதிகமாக வந்து செல்கின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சாலை மிக குறுகலாகவும், சாலையின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் வளர்ந்தும்,சாலை ஓரத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டும் காணப்பட்டு வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் விதமாக கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பெரும்பாலான இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியும், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி இயற்கை அழகை ரசித்து செல்லும் விதமாக இன்டெர் லாக் கற்களை பதிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது.

    தற்போது அந்த பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது
    • சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

    கோத்தகிரி,

    கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் மழையால் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து ஆங்காங்கே பாதிப்படைந்தது. இதனை சரி செய்யும் விதமாக மண்சரிவுகள் ஏற்பட்ட மற்றும் குறுகலாக இருந்த சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல தொய்வு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் புதிதாக போடப்பட்டுள்ள வேகத்தடைக்கான பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்படைகிறது. எனவே இந்த இந்த சாலைகளில் நடைபெற்றிருக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.
    • வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண் சரிவு ஏற்படுவதை தடுக்க தடுப்புச்சுவர் கட்டுவது, மழைநீர் கால்வாய் அடைப்புகளை சுத்தம் செய்வது, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்வது, மழைநீர் கால்வாய்கள் அமைப்பது, பாலங்கள் பழுது பார்ப்பது, சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை முதல் கட்டபெட்டு வரை ரூ.50 லட்சம் செலவில் குறுகிய சாலைகளை விரிவாக்கம் செய்து, மழைநீர் எளிதில் வழிந்தோடும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. அந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதே போல நகரின் முக்கிய சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    • தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது
    • 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.

    இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி விடுவர்.

    குறிப்பாக தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    இந்த சாலை வளைவை சரி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்த சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை விரிவு செய்ய முடிவு செய்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலை வளைவை விரிவு செய்ய பணிகள் நடைபெற துவங்கின. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல், தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும். மேலும் நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை,வங்கிகள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் இந்த தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .இந்த நிலையில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை, பல்லடம் - காரணம்பேட்டை வரை, சுமார் 10 கி.மீ. தூரம் உள்ள 2 வழிச்சாலையை,4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு,விரிவாக்க பணிகள் கடந்த 1 மாதமாக நடைபெற்றுவருகிறது.

    இந்த நிலையில் பல்லடம் நகரத்தில் அண்ணா நகர்முதல் பனப்பாளையம் வரை விரிவாக்க பணிகள் விரைவில் பணிகள் துவங்க உள்ளதாகவும்,எனவே நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தபடுவதாக நெடுஞ்சாலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட அறிவிப்பில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல், பல்லடம் - தாராபுரம் பிரிவு முதல் செட்டிபாளையம் பிரிவு வரை உள்ள, 3 கி.மீ. நீள தூரத்துக்கு, 4 வழிச்சாலையாக ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில், கடைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு செய்தவர்கள், அவர்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரசுக்கு சொந்தமாக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புவனகிரியில் ஆபத்தான பயணத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கடலூர்:

    புவனகிரி- குறிஞ்சிப்பாடி செல்லும் முக்கிய பிரதான சாலை. இந்த சாலை வழியாக ஏராளமான பஸ்கள், வாகனங்கள் செல்வது வழக்கம்.

    இந்த சாலையில் மேல மணக்குடி என்னும் இடத்தில் குறுகிய வளைவு உள்ளது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது. இதனை அறிந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் மழை காலங்கள் ஆரம்பித்துவிடும், அப்படி கனமழை பெய்ய தொடங்கினால் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்த வழியாக கடலூர், பாண்டி, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலை.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இதனை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு சென்றுள்ளார். மாவட்ட கலெக்டர் எந்த நிலையில் இந்த பணியை பார்த்தாரோ அதே நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆகையால் அகலப்படுத்தும் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×