search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்

    • கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது
    • சாலை விரிவாக்க பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது.

    கோத்தகிரி,

    கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் மழையால் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரையிலான மலைப்பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டது. இதனால் சாலை குறுகலாகி போக்குவரத்து ஆங்காங்கே பாதிப்படைந்தது. இதனை சரி செய்யும் விதமாக மண்சரிவுகள் ஏற்பட்ட மற்றும் குறுகலாக இருந்த சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் பெரும்பாலான இடங்களில் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல தொய்வு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் புதிதாக போடப்பட்டுள்ள வேகத்தடைக்கான பணிகளும் நடைபெறாமல் இருப்பதால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிப்படைகிறது. எனவே இந்த இந்த சாலைகளில் நடைபெற்றிருக்கும் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×