search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோவில் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழி.

    ஒட்டன்சத்திரத்தில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

    • லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதி திண்டுக்கல், மதுரை, தேனி, பழனி, போடி, ராமேஸ்வரம், சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, ஊட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லெக்கை யன்கோட்டை முதல் அரசப்பபிள்ளைபட்டி வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 4 வழிச்சாலை பணியில் சாலையை அகலப்படுத்தும் போது சிறு பாலங்கள், தடுப்புச் சாலைகள் அமை க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பாலங்கள் அமைப்பதற்காக ஆங்கா ங்கே குழிகள் தோண்டி வேலை நடைபெற்று வருகிறது.

    பணிகள் விரைவில் முடிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழிகள் தோண்டிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு இல்லாமலும், தடுப்புகளும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் உள்ளே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் குழிகளில் விழுந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் மாவட்ட தலைவர் விஸ்வரத்தினம் கூறியதாவது, போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பிற்காலங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் இந்த 4 வழிச்சாலை அமை க்கும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இருந்த சாலையில் சென்டர் மிடியன்கள் அமைக்க ப்பட்டிருந்தது. அவை தற்போது அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த சென்டர் மிடியனை அகற்றிய பின்பு புழுதிகள், தூசிகள் கிளம்பி வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்வோரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    மேலும் உணவகங்கள், பேக்கரி, டீ கடையில், பழக்கடைகள், சாலையோர வியாபாரிகள், காய்கறி கடைகள் அனைத்திலும் தூசிகள் படிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகிறது. மேலும் நெடுஞ்சாலையில் இடிபட்ட கட்டிட கழிவுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு பணிகளை தொடர வேண்டும். மேலும் பாலம் கட்டும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைத்து இரவு நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கையை நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் எனக் கூறினார்.

    Next Story
    ×