என் மலர்
நீங்கள் தேடியது "Director Mani Ratnam"
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான படம் 'தக் லைஃப்'. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது.
இயக்குநர் மணிரத்னம் தக்லைஃப் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தனது கதையை சிம்பு, விஜய் சேதுபதியிடம் கூறியதாகவும், இதில், சிம்பு அரசன் மற்றும் அஷ்வத்தின் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது.
நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். மணி ரத்னம் அவர் இயக்கும் படத்திற்கு என தனி ஸ்டைல் இருக்கும், இன்று மணிரத்னம் அவரது 69- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மணி ரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "தம் திரைமொழியின் ஆளுமையால் இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராகக் கோலோச்சும் திரு. மணிரத்னம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்னும் பல இளம் இயக்குநர்களுக்கு inspiration-ஆக அமையும் படைப்புகளைத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என விழைகிறேன்." என கூறியுள்ளார்.
- தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார்.
- உங்களை நினைத்து பெருமையா இருக்கிறது.
சென்னை:
`பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில்'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலை சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தனம் பேசியுள்ளார்.
அதில் இயக்குநர் மணிரத்னம் கூறியதாவது:-
மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையிலையும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு. இதில் எப்படி கிராம கதையில் இவ்வளோ பேரு இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு. இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.






