என் மலர்
நீங்கள் தேடியது "voters name"
- SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம் ஆகும்.
- சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- என்னை தேற்கடிக்க முடியாவிட்டால் எங்களை நீக்க முயற்சி செய்கிறீர்கள்.
- அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும். தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜகவுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள்.
இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தையொட்டி குமரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி மற்றும் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி என்று 2 தொகுதியிலும் பல வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தின் பாறசாலை நெய்யாற்றின் கரை, கோவளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, விளவங்கோடு, ஈச்சவிளை, கோழிவிளை, பனச்சமூடு, ஊரம்பு, காக்க விளை பகுதிகளில் இது போன்ற இரட்டை பதிவுகள் இடம் பெறுகிறது.

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணி நடந்தபோது, திருவனந்தபுரம், கன்னியாகுமரி தொகுதியில் 200 வாக்காளர் பெயர் 2 இடங்களிலும் இடம் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். #LokSabhaElections2019 #ThiruvananthapuramConstituency #KanyakumariConstituency






