என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களை நீக்க தி.மு.க.-விற்கு என்ன அச்சம்?: சி.வி. சண்முகம்
- SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம்.
- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.
இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு திமுகவிற்கு என்ன அச்சம். முதல்வர் ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
SIR குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் கொடுத்த பிறகு சிவி சண்முகம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் மேலும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
SIR விண்ணப்ப படிவங்களை BLO களிடம் பறித்து திமுகவினரே நிரப்பி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
தமிழக வாக்காளர் பட்டியலில் யார் யார் பெயர் இடம் பெற வேண்டும் யார் யார் பெயர் நீக்கப்பட வேண்டும் என்பதை திமுகவினரை முடிவு செய்கிறார்கள் தேர்தல் ஆணையத்தின் அத்தனை அதிகாரங்களையும் அவர்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 300க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ராகுல் காந்தி இதே போன்ற ஆதாரங்களை தான் வெளியிட்டு வாக்கு திருட்டு புகார்களை கூறியிருந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.






