சட்டமன்ற தேர்தலை ஒட்டி துணை தேர்தல் ஆணையர் வரும் 11-ந்தேதி தமிழ்நாடு வருகை

வரும் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி துணை தேர்தல் ஆணையர் வரும் 11-ந்தேதி தமிழ்நாடு வருகை
Published on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் வரும் 11-ந்தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழ்நாடு வர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com