search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் -  கல்லூரி முதல்வர்களுக்கு  கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.
    • 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.

    திருப்பூர்

    வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தம் பணிகள் கடந்த 9ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இளம் வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் பட்டியலில் சேர்க்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்றனர்.

    18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் விடுபடாமல், வாக்காளராக பதிவு செய்யவேண்டும்.வரும் 2023 ஏப்ரல் ,ஜூலை, அக்டோபர் 1-ந் தேதிகளில் 18 வயது பூர்த்தி அடையும் மாணவர்களையும் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கச் செய்ய வேண்டும்.இப்பணிக்கு கல்லூரி முதல்வர்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கூட்டத்தில் கலெக்டர் வினீத் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×