search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar Number Link"

    • புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
    • வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும் வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 25 ஆயிரத்து 30 வாக்காளர் உள்ளனர்.ஆதார் இணைப்பில் திருப்பூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது. மொத்த வாக்காளர்களில் இதுவரை 52.30 சதவீதம் பேர், அதாவது 12 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களே, ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் கிராம பகுதிகள் முன்னிலையிலும் நகர பகுதிகள் பின்தங்கிய நிலையிலும் உள்ளன.

    66.14 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில், மடத்துக்குளம் தொகுதி முதலிடம் வகிக்கிறது. 60.08 சதவீதத்துடன் உடுமலை இரண்டாமிடத்தில் உள்ளது. 59.38 சதவீதத்துடன் அவிநாசி, 59.13 சதவீதத்துடன் தாராபுரம், 58.15 சதவீதத்துடன் காங்கயம் தொகுதிகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.நகர பகுதிகளான திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள், வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 938 பேரில் 1.32 லட்சம் பேர் (34.47 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 800 வாக்காளர்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் (46.83 சதவீதம்),பல்லடத்தில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 89 ஆயிரம் பேரில் 1.81 லட்சம் பேர் (46.77 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் கிராம பகுதிகளே முன்னிலையில் உள்ளன. திருப்பூர் வடக்கு, பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய நகர பகுதி வாக்காளர் மத்தியில் ஆதார் இணைப்பு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

    இந்த மூன்று தொகுதிகளிலும் இடம்பெயரும் நிலையிலான தொழிலாளர் அதிகம் வசிப்பதே இதற்கு முக்கிய காரணம். வாக்காளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    Voter Helpline செயலி, voterportal.eci.gov.in என் கிற இணையதளம் வாயிலாக, மிக சுலபமாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கலாம். வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.
    • வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    திருப்பூர்:

    தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்துவருகிறது. கடந்த 9-ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆண் ,11 லட்சத்து 76 ஆயிரத்து 453 பெண்,324 திருநங்கை என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.வரும் டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் நடக்கிறது. பணிக்கு செல்வோர் வசதிக்காக 4 வார விடுமுறை நாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,061 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அதனால் முதல் நாள் முகாம் களைகட்டவில்லை. முதல் முகாம் நாளில் மொத்தம் 5,198 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,819 பேர் முகாம் வாயிலாகவும், 2,379 பேர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    மொத்த விண்ணப்பத்தில் 52.15 சதவீதம் அதாவது, 2,711 பேர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 வழங்கியுள்ளனர். இவர்களில் 1,944 பேர் முகாமிலும்,767 பேர் ஆன்லைனிலும் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.

    திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மணி பப்ளிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையம், வடக்கு தொகுதியில் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கேத்தம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரானந்தபுரம் மாநகராட்சி பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 6,719 பேர்,முகவரி மாற்றம் உட்பட பல்வேறு திருத்தங்களுக்காக 2,415 பேர், பெயர் நீக்கத்துக்கு 908 பேர் என ஞாயிற்றுக்கிழமை முகாமில் மொத்தம் 10,042 பேர் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    தொடர்ந்து வரும் 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் பங்கேற்பர். குறிப்பாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.அதனால் அனைத்து மையங்களிலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 தட்டுப்பாடு இன்றி வைத்திருக்கவேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.

    18 வயது பூர்த்தியான, ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில், 2 நாட்களாக நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் குறித்து அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, அமிர்தராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமையில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வீடு வீடாக சென்று, 100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்ய, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். வயது பூர்த்தியான ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரையும் இணைக்க வேண்டும். வரும் 26 மற்றும் 27 ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் நீக்கம் செய்தல், பெயர் சேர்க்க, ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைய வழியில் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 737 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×