என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம்
வேலூர்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைய வழியில் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 737 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.
இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்