search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "G20 meeting"

    • ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது.
    • ஜி20 மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-ம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனவே அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது.
    • பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் 6 நாட்கள் நடைபெறும் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று(புதன்கிழமை) மற்றும் 28-ந்தேதி மாமல்லபுரம் வருகை தரும் அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ககூடாது என்றும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் உமா மகேஸ்வரி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து. நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பேரூராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் என பல கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள் என 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 400 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • சென்னை வந்துள்ள “ஜி-20” நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள்.
    • வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

    சென்னை வந்துள்ள "ஜி-20" நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்ளனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் மாமல்லபுரம் புராதன சின்னம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகள் செல்லும் வழித்தடம், புராதன சின்னங்கள், உணவருந்தும் ஓட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையையொட்டி புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் "டிரோன்" கேமரா பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்ட மைப்பை உருவாக்கி உள்ளது.
    • கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக் குழுவின் இறுதிக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்ட மைப்பை உருவாக்கி உள்ளது. 2023-ல் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று உள்ளது.

    இதையொட்டி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் இன்று காலையில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    இதில் 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாளையும் தொடர்ந்து இந்த மாநாடு நடக்கிறது.

    • பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
    • எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.

    இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.

    ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.

    • ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜி20 அமைப்பின் செயற்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

    ஆனால், சமீபத்தில் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, 5 துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்காக ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் விஜய் குமார் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், என்எஸ்ஜி மற்றும் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், ஃபிதாயீன் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட ஏதேனும் சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஜி20 செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பிற்காக மரைன் கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி) மற்றும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

    • இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
    • இதில் ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகள் பங்கேற்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ரஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின்நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது என கனடா மந்திரி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் ரஷியாவின் பங்கேற்பு அபத்தமானது.

    இந்தக் கூட்டத்தில் ரஷியா பங்கேற்றது தீயணைப்பு வீரர்களின் கூட்டத்திற்கு தீ வைப்பவர்களை அழைப்பது போல் இருந்தது.

    உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அதன் பொருளாதார விளைவுகளுக்கு ரஷியா நேரடியாகவும் முழு பொறுப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    ×