search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Joe Biden"

    • டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.
    • இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் இவ்வருடம் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட உள்ள தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் இறங்கி உள்ளார்.

    குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே அதிபர் வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். மேலும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார். ஆனால் வேட்பாளர் தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், அதிபர் வேட்பாளர் போட்டியில் நான் நீடிப்பேன் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் ஆட்சி அமைப்பார்
    • டிரம்பின் செயல்திட்ட வடிவம் அஜெண்டா-47 என அழைக்கப்படுகிறது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி வகிப்பார்.

    அதிபர் தேர்தலில் வென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக டிரம்ப் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கைகளை 'அஜெண்டா 47' (Agenda 47) என அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். அதன்படி, தனது முந்தைய பதவி காலத்தில் தனது திட்டங்களுக்கு நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் தடையாய் இருந்ததாக கருதும் டிரம்ப், இம்முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தயார் செய்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    நகரங்களில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை அமெரிக்க நகரங்களுக்கு வெளியே குடியமர்த்துவது, தேசபக்தி உள்ள ஆசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவது, அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரு உலகளாவிய அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது, ரஷியாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கான பல கோடி மதிப்பிலான உதவிகளை நிறுத்துவது, எரிசக்திக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வது என பல அதிரடி நடவடிக்கைகள் இந்த 'அஜெண்டா 47' மூலம் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

    அமெரிக்க வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வகுக்கும் இந்த திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியிலும் ஒரு சிலர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிரம்ப் மீது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளில் வரும் தீர்ப்பை பொறுத்தே அவர் அதிபராவது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் நேரத்தில் பைடன் 82 நெருங்குவார்; டிரம்ப் 78 நிறைவு செய்வார்
    • எனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர் என்றார் டிரம்ப்

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    "ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

    இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார்.
    • டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

    ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

    இதுதொடர்பாக, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதம மந்திரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. வரலாற்றில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் அமெரிக்கா, இந்தியா கூட்டாண்மை வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல்மிக்கது என்பதை உறுதிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
    • இரு நாடுகளிடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா புறப்பட்டார்.
    • அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினர்.

    இதற்கிடையே, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

    இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ம் தேதி நடக்கிறது.

    தொடா்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்க உள்ளார்.

    • ஜி20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் புதுடெல்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது.
    • ஜி20 மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் பங்கேற்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7-ம் தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. எனவே அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது.

    இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதையடுத்து, திட்டமிட்டபடி அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார். அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு நட்புறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • ஜி20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    வாஷிங்டன்:

    ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.

    ஜி 20 நாடுகளின் மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள். சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

    ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர்.
    • ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலானது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 12,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

    இந்நிலையில், ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பெரிய பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
    • அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    வாஷிங்டன்:

    ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, மோடி பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். அவர் அவர் குவாட் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் அவரது மானைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்கா சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று காலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

    ×