என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Article 370"
- காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள்.
பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலம் சோனிபட் கோஹனாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
2024 மக்களவை தேர்தல் ஒரு போர் போன்றது. ஒரு மக்கள் வளர்ச்சி, மறுபக்கம் வாக்கு ஜிஹாத். யார் வெற்றி பெறுவார்கள்? என்பதை அரியானா மக்களிடம் கேட்க விரும்புகிறேன். (சிறிது நேரம் காத்திருந்த மோடி, மோடி ஆட்சி என்று மக்கள் முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி) உங்கள் பதில் முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் இனிமேல் மூவர்ணக்கொடி மட்டுமே பறக்கும் என தைரியத்திற்கு பெயர்போன அரியானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் சொல்ல விரும்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்ற கனவை மறந்து விடுங்கள். நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். தடையாக விளங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் மயானத்தில் புதைத்துவிட்டோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார்.
- பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
- அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.
பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.
காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.
ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.
மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.
அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
- சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்தார்.
- பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்றார்.
அப்போது பல சதாப்தங்களாக, அரசியல் ஆதாயத்திற்காக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் சட்டப்பிரிவு 370 பெயரில் மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். தற்போது இன்று அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் வாய்ப்புகளை பெற்றுள்ளோம். மக்களுக்கு உண்மை தெரியும்... அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டார்கள். நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஜம்மு-காஷ்மீர் இது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த பரூக் அப்துல்லா "சட்டப்பிரிவு 370 மோசமானது என்றால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எப்படி முன்னேற்றம் அடைந்தது.
சட்டப்பிரிவு 370 இவ்வளவு மோசமாக இருந்தால், மாநிலங்களவையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பேசியதை பிரதமர் மீண்டும் கேட்க விரும்புகிறேன். சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோதுதான் குலாம் நபி ஆசாத் குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையிலான வளர்ச்சி குறித்து ஒப்பிட்டு பேசியுள்ளார்.
தற்போாது சட்டப்பிரிவு மற்றும் வாரிசு அரசியல் பொறுப்பு என்றால், எப்படி வளர்ச்சி அடைந்தோம்? இது மக்களுடைய ஆட்சி. முதலமைச்சருக்கான தேர்தலில் தோல்வி அடைந்தேன். ஆகவே, வாரிசு ஆட்சி எங்கே இருக்கிறது?. வாரிசு ஆட்சி என்பதை நான் பொதுவாகவே பாராளுமன்றத்தில் கேட்டுள்ளேன். ஒவ்வொரு முறை பேசும்போதும், பிரதமர் மோடி இதன்மீது குறிப்பிட்ட தாக்குதலை வைக்கிறார்" என்றார்.
- சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீருக்கு சென்றார்.
- பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க. அரசால் கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி 2-வது முறையாக கடந்த மாதம் 20-ம் தேதி ஜம்முவுக்கு சென்று ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக இன்று காஷ்மீருக்கு சென்றார். பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஸ்ரீநகர் பாக்சி மைதானத்தில் நடந்த வளர்ச்சி அடைந்த பாரதம்-வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் ஆலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் உள்பட உள்நாட்டு சுற்றுலா மற்றும் புனித யாத்திரை புத்துணர்ச்சி, ஆன்மீக பாரம்பரிய விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பரந்த அளவிலான புனித யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் சுமார் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டின் தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள நவக்கிரக கோவில்கள், சாமுண்டீஸ்வரி திருக்கோவில் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உங்கள் நாட்டை பாருங்கள், மக்கள் தேர்வு 2024 மற்றும் இந்தியாவுக்கு செல்லுங்கள் எனும் உலக அளவிலான பிரசாரத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 பேருக்கு பணி நியமண ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்கினார். பெண் சாதனையாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
- ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
- ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.
ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் பிரியாமணி, யாமி கவுதம் நடித்துள்ள ஆர்ட்டிக்கிள் 370 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. ஆர்ட்டிக்கிள் 370 படத்தின் மூலம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி இருந்தார்.
ஆர்டிக்கிள் 370 படத்தை குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் திரையிட படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். அங்குள்ள தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறி படத்துக்கு தடை விதித்தனர்.
வளைகுடா நாடுகள் தடை காரணமாக அங்கு வசிக்கும் இந்திய மக்கள் ஆர்ட்டிக்கிள் 370 படத்தை பார்க்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரதமர் பாராட்டிய படத்துக்கு வளைகுடா நாடுகள் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ட்டிக்கிள் 370 இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்று நல்ல வசூல் பார்த்து வருகிறது.
- சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- லடாக்கை மறுசீரமைப்பு செய்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்போது, மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து சட்டம் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதி ஒப்பதல் வழங்கினார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. மேலும், சட்டப்பிரிவு 370 தற்காலிகம்தான் எனத்தெரிவித்தது.
இதற்கு ஆதரவு ஒருபக்கமும், எதிர்ப்பு ஒரு பக்கமும் இருந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீர் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/12/08/1990927-supreme-court.webp)
இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறியதாக அவருடைய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாஃப் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், இம்ரான் கான் "சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோத இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல தசாப்தங்களாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குப் பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
- லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. ஒரு தரப்பினர் இந்த தீர்ப்பை வரவேற்ற போதிலும் ஜம்மு- காஷ்மீர் தலைவர் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். ஆனால், இதே உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சட்டப்பிரிவு 370 நிரந்தரமானது எனத் தெரிவித்துள்ளனர். அது இன்னும் அப்படியே இருக்கிறதா? எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும். ஒருநாள் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதன்பின் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
70 ஆண்களுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 200 ஆண்டுகளில் இது மீண்டும் கொண்டு வரப்படலாம். யாருக்கு தெரியும்" என்றார்.
உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஐந்து பேரில் மூன்று பேர் ஒரே தீர்ப்பையும் மற்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினார். ஒட்டுமொத்தமாக சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதுதான். அதை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மற்றும் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் சடடமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. லடாக்கை யூனியன பிரதேசமாக அறிவித்தது செல்லும் எனவும் தெரிவித்தனர்.
- ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
- இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.
இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Today's Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023
- உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது- குலாம் நபி ஆசாத்
- இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை- உமர் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்புரிவு 370-ஐ ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அடுத்தாண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த தீர்ப்பா் மகிழ்ச்சியடையவில்லை." என்றார்.
உமர் அப்துல்லா கூறியதாவது:-
இந்த நிலையை அடைய பா.ஜனதாவுக்கு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. நாங்கள் நீண்ட காலத்திற்காக தயாராகியுள்ளோம். இந்த தீர்ப்பு ஏமாற்றம்தான். ஆனால், மனம் தளரவில்லை. தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.
- 2019-க்குப் பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. எல்லை வரையறை செய்த பின் தேர்தல் என மத்திய அரசு தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.
மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்குள் நாங்க செல்ல விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். என்றபோதிலும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
லடாக்கை மறுசீரமைப்பு யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
- . தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர்.
- நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.
மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியதாகவது:-
1. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.
3. இந்தியா உடன் இணைந்தபோது இறையாண்மையின் ஒரு பகுதியை தக்க வைத்துக்கொள்வில்லை.
4. ஜனாதிபதி ஆட்சி நடைபெறும்போது மாற்ற முடியாத அதிகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
5. மத்திய அரசிற்கான அரசியலமைப்பு சட்டம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.
6. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
7. காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை கிடையாது.
8. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு.
தீர்ப்பு விவரம் வருமாறு:-
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் என்பது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அந்த அவசர சட்டத்துக்கு குறிப்பிட்ட ஆயுள்தான் உண்டு. எனவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கொண்டு வரப்பட்ட 370-வது சட்டப்பிரிவு தற்காலிக மானதுதான்.
அந்தக்காலக்கட்டத்தில் போர்ச்சூழல் காரணமாகவே அவசர சட்டம் மூலம் சிறப்பு அந்தஸ்துகொண்டு வரப்பட்டது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எனவே அந்த அவசர சட்டத்தை ஜனாதிபதி ரத்து செய்தது செல்லும். ஜனாதிபதிக்கு அவசர சட்டத்தை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. இந்த விசயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய இயலாது. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்படி செல்லும்.
ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சரியானதுதான். இந்த விசயத்தில் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது.
அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது செல்லுமா? என்று கேள்வி கேட்க முடியாது. ஜனாதிபதி ஆட்சி செல்லுபடியாகுமா? என்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு தனியாக தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு முழுமையாக அதிகாரம் இருக்கிறது.
மத்திய அரசின் இத்தகைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன்பு அதற்காக ஆலோசனை பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மாநில சட்டசபையில் கொண்டு வந்து பரிந்துரைக்கப்படும் எந்த விசயமும் ஜனாதிபதியை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. இதில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கே முழு அதிகாரம் உள்ளது.
காஷ்மீரை நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக நீடிக்க செய்ய ஜனாதிபதி எடுத்த சட்ட நடவடிக்கைகள் செல்லும். அதன் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து விதிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு பொருந்தும்.
காஷ்மீர் விசயத்தில் மட்டுமின்றி அரசியல் அமைப்பு விதிகளை செயல்படுத்த ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்த முடிவையும் கேள்வி கேட்க முடியாது. அதன் அடிப்படையில் காஷ்மீரில் இருந்து பிரித்து லடாக்கை தலைமையிடமாக கொண்டு யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது செல்லும். அது தொடர்ந்து செயல்படலாம். அதில் எந்த தவறும் இல்லை.
அதே சமயத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும். காஷ்மீரில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.
- 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது.
- மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 சட்டப்பிரிவு ரத்து வழக்கில் மூன்று விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தை தீர்ப்பாக வெளியிட்டுள்ளனர். ஆனால் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டு உள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பை வழங்கினார்.
மூன்று தீர்ப்பாக இருந்தாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது.
16 நாட்கள் நடந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.
அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்த தவறும் இழைக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)