என் மலர்
நீங்கள் தேடியது "parliament session"
- காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
- கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு முதல்முறையாக பாராளுமன்றம் கூடுவதால் அதுகுறித்த நடவடிக்கை பற்றியும், இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் டிரம்ப்பின் தலையீடு குறித்தும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம், பகல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாராளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
- இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற காட்சிகள் சிறப்பு கூட்டத்தொடரைக் கோரியுள்ளன.
இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரசனைகள் குறித்து விவாதிக்க கூட்டு அமர்வுக்கு ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வைக்கவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.
- முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
- எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.
இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.
கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.
மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.
இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.
- நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
- பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்
இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.
இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.
- பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் இன்று காலை கூட்டம் தொடங்கியது.
- எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் இரு அவைகளிலும் கடும் அமளி.
2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது.
- இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.
2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.
- அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.
- பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.
இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளையும் வழங்கி உள்ளன.
இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அவை கூடியதும் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.
- அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும்.
- பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.
பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மத்தியில் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
- ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா்.
- தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர், "இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும் இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீரகள்.
நாங்கள் மாநிலங்கள் சமூக நீதிக்கான மாடல்களை உருவாக்க முடிகிறது. ஆனால் உங்களால் அது முடியவில்லை.
தமிழக சட்டசபையில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மட்டும் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் இதையே பின்பற்றுகிறார்கள். மாநில ஆளுநர்கள் மத்திய அரசின் கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். ஆளுநர்களுக்கு தனிப்பட்ட எந்த விருப்ப உரிமையும் இல்லை.
ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசியல் சாசன வடிவமைப்பில் அம்பேத்கர் தெளிவாக கூறியுள்ளா். கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை ஆளுநர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 கோடி இந்திய இளைஞர்கள் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டங்கள் பற்றி விவாதம் செய்ய நேரம் ஒதுக்குவதில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு பேசினார்.
- ராகுல் காந்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
- அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழு அமைக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய ஜனநாயகம் சீர் குலைந்து வருவதாகவும், அதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று லண்டனுக்கு சமீபத்தில் சென்ற ராகுல்காந்தி பேசி இருந்தார்.
பாராளுமன்ற 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் கிளப்பினார்கள். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது.
ராகுல்காந்தி, அதானி பிரச்சினையால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் 2-வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டன. ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் இன்று 3-வது நாளாக முடங்கியது.
பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். கூட்டுக்குழு விசாரணை கோரி அவர்கள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர்.
சபையின் மைய பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பதிலடியாக கோஷமிட்டனர். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக சபாநாயகர் ஓம்.பிர்லா வால் அவையை நடத்த முடியவில்லை. யாரும் அமைதி அடையாததால் அவர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.
மேல்சபையிலும் இதே விவகாரத்தால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி பிரச்சினையை கிளப்பினார்கள். இதனால் அவையில் கூச்சல்- குழப்பம் நிலவியது.
இதைதொடர்ந்து அவைத் தலைவர் 2 மணி வரை சபையை ஒத்திவைத்தார். ராகுல்காந்தி, அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 2 மணி வரை முடங்கின.
- பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது.
- ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது.
அதானி குழும முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 4 நாட்களாக இரு சபைகளும் முடங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று 5வது நாளாக கூடியது. தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும், அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதானல், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து 5வது நாளாக இன்று இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
பாராளுமன்றம் கடந்த 13ம் தேதி கூடியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளியால் முடங்கியது.
லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதீய ஜனதா எம்.பி.க்களும், அதானி முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 5 நாட்களாக பாராளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது.
இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.
அவர்களை அமைதி காக்குமாறும், தங்கள் இருக்கைக்கு சென்று அமரு மாறும் சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை கூறினார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.
இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதேபோல் மேல்- சபையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதே பிரச்சினையை வழக்கம் போல எழுப்பினார்கள். சபை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டும் அவர்கள் இடைவிடாமல் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் மேல்- சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.






