search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி விவகாரத்தால் தொடர் அமளி- மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு
    X

    அதானி விவகாரத்தால் தொடர் அமளி- மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    • அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும்.
    • பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

    பாராளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடியது. இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் சபைக்கு வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மத்தியில் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால், பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    Next Story
    ×