search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்

    • ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.
    • இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றம் எடுத்த முடிவை அரசியல் அமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர மற்றும் சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் ஒரு உறுதியான அறிவிப்பாகும்.

    ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு, அசையாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

    இன்றைய தீர்ப்பு வெறும் சட்ட தீர்ப்பு மட்டுமல்ல. இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    Next Story
    ×