என் மலர்
இந்தியா

எனது பதவி பாதுகாப்பாக உள்ளது: முதல் மந்திரி சித்தராமையா
- சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
- முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.
சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.
எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.
முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.
Next Story






