என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதள முன்பதிவு தொடக்கம்
    X

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதள முன்பதிவு தொடக்கம்

    • அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.
    • மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    சென்னை:

    2025-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 22-ந்தேதி முதல் செப்டம்பர் 12-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுகளும் என மொத்தம் ரூ.83.37 கோடி செலவில் நடத்தப்பட உள்ளது.

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். அடுத்த மாதம் 16-ந்தேதி முன்பதிவு செய்திட கடைசி நாளாகும்.

    மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணையதளம் வாயிலான வீரர், வீராங்கனைகளின் இந்த முன்பதிவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×