search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்
    X

    கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    தஞ்சையில், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்

    • இல்லம் தேடி சென்று இளைஞர் அணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மத்திய மாவட்ட ஒன்றிய, நகர ,பேரூர் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்று பேசினார்.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ராஜேஷ் கண்ணா , கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    தி.மு.க. தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் -அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு விழாவாக நடத்தப்படும் என அறிவித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளான வருகிற 27-ந் தேதி ஆதரவற்ற , முதியோர் இல்லங்களில் உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.

    அன்றைய தினம் கட்சி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×