search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை
    X

    அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை

    • அண்ணா, பெரியார் பிறந்தநநாளையொட்டி அ.தி.ம.மு.க. சார்பில் நாளை சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
    • தன்மானமுள்ள தமிழர்களுக்கு திருவிழாவாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் வழக்கறி ஞர் பசும்பொன் பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதா வது-

    பகுத்தறிவு என்கின்ற சுயமரியாதை விதையை நமக்கு ஊட்டி தட்டி எழுப்பிய அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி, அதைப் போன்று ஐயா பெரியாரின் தலைமைச் சீடர் காஞ்சி தந்த கருவூலம், தென்நாட்டு பெர்னாட்சா, தமிழ்நாட்டு இங்கர்சால், மறுமலர்ச்சி தமிழினத்தின் தூதுவன், காஞ்சித் தலை வன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நாளை (15-ந் தேதி) இரண்டும் உண்மை யான திராவிட இயக்க தொண்டர்களுக்கு, தன்மானமுள்ள தமிழர்க ளுக்கு திருவிழாவாகும்.

    அந்த அடிப்படையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஐயா அவர்க ளின் பிறந்தநாளையும், அண்ணா அவர்களின் பிறந்த நாளையும் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு நாடு முழுவதும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள், அனைத்து அணி களின் நிர்வாகிகள், கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை உள்ள பொறுப் பாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து இனிப்புகள் வழங்கி யும், அதைப்போன்று பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித் தும் இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாட வேண்டுகி றேன்.

    சிலைகள் இல்லாத்த இடத்தில் ஐயா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்களின் படத்தை வைத்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டா டிட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழ கத்தின் தலைமைக் கழகத் தின் சார்பில் கேட்டுக்கொள் கின்றேன்.

    தலைமைக் கழகம் சார்பில் மதுரையில் அன்னை இல்லம் பல்லவன் நகர் 3-வது தெருவில் எனது தலைமையில் காலை 9 மணிக்கு நாளை (15-ந் தேதி) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளும், வருகிற 17-ந் தேதி தந்தை பெரியாரின் பிறந்தநாளும் கொண்டா டப்படும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×