search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    சிவகங்கையில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுகூட்டம் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. வருகிற 11ந்தேதி மாலை சிவகங்கை அம்மா உணவகம் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார்.

    இதையொட்டி சிவகங்கை யில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செய லாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சிவாஜி, சிவசிவஸ்ரீதர், சேவியர்தாஸ், பழனிச்சாமி, கோபி, ஜெகதீஸ்வரன், செல்வமணி, பாரதிராஜன், அருள் ஸ்டீபன், வாசு, சோனைரவி, செந்தில் குமார், மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் மற்றும் நகர செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலி தாவின் 75-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூவந்தியில் இருந்து பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு கழக பொதுச்செயலாளரை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×