search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratan Tata"

    • துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா.
    • சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சுதா கொங்கரா - சூர்யா

    சுதா கொங்கரா - சூர்யா

    சில தினங்களாக பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா திரைப்படமாக இயக்கவுள்ளதாக இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சுதா கொங்கரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் திரு. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய ரசிகர். ஆனால், அவரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை. ஆனால் எனது அடுத்த படத்தின் மீதுள்ள உங்கள் ஆர்வத்திற்கு நன்றி! விரைவில்! என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலமாக சுதா கொங்கராவுக்கு ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என தெளிவாகியுள்ளது.

    சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்திற்கு எதிராக தொடர்ந்திருந்த வழக்கை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது.
    மும்பை :

    டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். டாடா சன்ஸ் நிறுவன இடைக்காலத் தலைவராக ரத்தன் டாட்டா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது(தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் உள்ளார்).

    பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது. டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே, சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவுக்கு அவர் தடை வாங்கக்கூடும் என்பதால் மிஸ்திரிக்கு எதிராக டாடா குழுமம் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்தது.

    இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் டாடா சன்ஸ் - மிஸ்திரி வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பதவி நீக்கத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. டாடா குழுமம் மற்றும் அதன் உறுப்பினர்களின் நம்பிக்கையை மிஸ்திரி இழந்ததால் அவர் நீக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
    பிரபலங்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு கோரும் தனது பயணத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, நாளை பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்திக்க உள்ளார். #AmitShah
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்தது. 

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

    அதனடிப்படையில், பதஞ்சலி நிறுவனதின் தலைவரும் யோகா துறையில் சிறப்பாக செயல்பட்டு வருபவருமான யோகா குரு பாபா ராம்தேவை அமித்ஷா நேற்று புதுடெல்லியில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவையும் அமித்ஷா கோரியுள்ளார்.

    இந்நிலையில், நாளை மும்பை வர உள்ள அமித்ஷா, பாடகி லதா மங்கேஷ்கர், நடிகை மாதுரி தீக்‌ஷித், தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். 

    முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் ஆகியோரை அமித்ஷா ஏற்கெனவே சந்தித்து அவர்களின் ஆதரவை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×