என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னிந்திய உணவு"

    • இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்
    • என்றும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.

    'இன்னைக்கும் இட்லிதானா' என சொல்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான பதிவுதான் இது. இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லிதான் முதலிடம் பிடித்துள்ளதாம். டின்னருக்கு நீங்க எப்புடியோ (உப்மா), அதுபோல ப்ரேக்ஃபர்ஸ்ட்க்கு அவங்க (இட்லி) என சுந்தரபாண்டியன் பட டயலாக்கை வைத்து எப்படி கலாய்த்தாலும், அய்யாதான் ஆல் ஏரியாலயு கிங்கு என கில்லி பட டயலாக்போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முதலிடம் பிடித்துள்ளது இட்லி. 'நீங்க நெனக்கிறமாதிரி நா சாதாரணமான ஆள் இல்லடா' என்பது போல பல குணாதியசங்களை கொண்டது இட்லி. 

    அதாவது தொட்டுப் பார்த்தால் பஞ்சு, கடித்துப் பார்த்தால் ரப்பர் (சில ஹோட்டல்களில்), சட்னியில் முக்கி எடுத்தால் சோப்பு நுரை போல உறிஞ்சும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு தனித்துவம். இன்னும் சொல்லப்போனால் இட்லி ஒரு மகாத்மா மாதிரி. மென்மையான உடம்பு, பெரிய மனசு, எல்லாருக்கும் பிடிக்கும். இன்னும் ஏதாவது சொல்லலாம் என நினைத்தால், புழந்தது போதும், எனக்கு புகழ்ச்சி புடிக்காது என இட்லியே கூறிவிடும். அதனால் இதனை இதோடு நிறுத்திக் கொள்வோம். 


    இட்லியை வைத்து பெரும் அரசியல் நடந்தது

    ஆனால் யார் இட்லியை தேடியிருப்பார்கள்? இட்லியை ஏன் தேடவேண்டும்? என நீங்கள் நினைப்பீர்கள். அதுகுறித்து பார்ப்போம். அட வேற யாரு இல்லங்க. எல்லாம் நம்ம பசங்கதான் என்று கூறுவதற்கு ஏற்ப இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் எனது கணிப்பு. காரணம் மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு சர்ச்சை இந்த வருட நடுவில் எழுந்தது. உங்களுக்கு நியாபகம் உள்ளதா? இந்த வாக்குவாதம் ரயில்நிலையம், பேருந்து நிலையம், சமூக வலைதளங்கள் என அனைத்து பக்கங்களும் முற்றியது. 

    முடிவுதான் என்ன?. வாக்குவாதம் முற்ற ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை விமர்சிக்க தொடங்கினர். அதாவது சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்களும், தென் மாநிலங்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது தென்னிந்தியர்களை கிண்டலடிக்கும் விதமாக பல போஸ்டுகள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றுதான் இட்லி. அதாவது தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. இப்படி இட்லியை வைத்து ஒரு அரசியலே நடந்தது.

    அப்போது இட்லி பற்றி தெரிந்துகொள்ள வட இந்தியர்கள் பலரும் தேடியிருக்கலாம். எது எப்டியோ நம்ம ரூட் கிளியர் ஆனா சரிதா என்பதுபோல அனைவரும் கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலில் இடம்பிடித்தார் இட்லி. 


    இட்லி

    இவ்ளோ தெரிஞ்சிகிட்ட நாம இவரோட (இட்லி) வரலாறு தெரியாம போனா எப்டி? 

    இவ்ளோ நாளா நாம எல்லாரும் இட்லி, நம்ம ஊர்ல பிறந்ததுன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அது எங்கயோ வெளிநாட்டுல இருந்து வந்துதுனு நிறைய பேர் சொல்றாங்க. எங்க இருந்து வந்தா என்ன? நம்ம ஊருக்கு வந்த பிறகு, நம்மளோட ஒன்னுக்குள்ள ஒன்னாய்ட்டாய்ங்க. அதனால வெளிநாடு வரலாறு எல்லாம் வேண்டாம். வட இந்தியர்கள் கிண்டலடித்ததுபோல அவர் என்னைக்கும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும். 

    • பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
    • முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு

    வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. 

    • வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக கூறிய அவர், கார பணியாரம், தேங்காய் சட்னி, வடை, கூட்டு, பொறியல் என 14 வகைகளுடன் உணவுகளை ருசித்தார். பாயாசத்துடன் அவர் தனது உணவை முடித்தார். இது நல்ல சுவையாக இருந்தது என கூறினார்.

    இதுதொடர்பான வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வணக்கம், தென்னிந்தியாவின் தாழி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன். தென்னிந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. சென்னைக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. விரைவில் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

    வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


    Vanakkam from Tamil Nadu Bhawan in Delhi! Today, I tried the iconic south Indian thali on a banana leaf, and I am so impressed by the complexity of these delicious south Indian delights. Chennai, you have my heart and I am excited to see you soon. #AmbExploresIndia pic.twitter.com/HrUoiD0Dma

    ×