search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US ambassador"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தூதர் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

    இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்பு நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

    இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த தருணத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக கூறிய அவர், கார பணியாரம், தேங்காய் சட்னி, வடை, கூட்டு, பொறியல் என 14 வகைகளுடன் உணவுகளை ருசித்தார். பாயாசத்துடன் அவர் தனது உணவை முடித்தார். இது நல்ல சுவையாக இருந்தது என கூறினார்.

    இதுதொடர்பான வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வணக்கம், தென்னிந்தியாவின் தாழி உணவினை வாழை இலையில் சாப்பிட்டேன். தென்னிந்திய உணவு என்னை மிகவும் ஈர்த்துள்ளது. சென்னைக்கு என் இதயத்தில் இடம் உள்ளது. விரைவில் உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த வீடியோ 2.35 லட்சம் பார்வைகளுடன் 4,300-க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

    வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் பலரும் தங்கள் மாநில உணவு வகைகளை உண்டு மகிழ வருமாறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


    Vanakkam from Tamil Nadu Bhawan in Delhi! Today, I tried the iconic south Indian thali on a banana leaf, and I am so impressed by the complexity of these delicious south Indian delights. Chennai, you have my heart and I am excited to see you soon. #AmbExploresIndia pic.twitter.com/HrUoiD0Dma

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஆட்சி மற்றம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகினார்.

    இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி (வயது52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. அமெரிக்க செனட் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற தன் மூலமாக அவருடைய பெயர் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருடைய நியமனத்துக்கான அறிவிப்பு வெளியாகும்.

    இதேபோல அமெரிக்க விமான படையின் உதவி செயலாளராக ரவிசவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்க வாழ் இந்தியரான அவர் தேர்வு பெற்றுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய வம்சாவளி ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50).
    • இதற்கான ஒப்புதலை செனட் சபை வழங்கி விட்டது.

    வாஷிங்டன்

    நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.

    காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

    அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.

    அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார். #USAmbassador #India #US
    மும்பை:

    ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு இந்தியா–ரஷியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நாட்டிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களையும் வாங்குவதற்கு இந்தியாவை வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககனிடம், இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அமெரிக்காவிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களோ அல்லது வேறு எந்த தளவாடங்களோ வாங்க வேண்டும் என இந்தியாவை நாங்கள் வற்புறுத்தப்போவதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை.



    இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ வாங்கும் வகையில் மிகப்பெரிய திறமையை அமெரிக்க ராணுவ அமைப்பு பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

    உண்மை என்றவென்றால், இந்தியா 15 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அதிக மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருக்கிறது என்று கூறிய ககன், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவுகள் விரிவடைந்திருப்பது குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

    ஆயுத கொள்முதல் தொடர்பாக இந்தியா எடுக்கும் சொந்த முடிவுகளை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார். #USAmbassador #India #US
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஷிய ராணுவ ஒத்துழைப்பில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் கூறியுள்ளார்
    பீஜிங்:

    ரஷிய நாட்டிடம் இருந்து சீனா அதிநவீன போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்கி குவித்து உள்ளது.

    இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

    ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வு கியான் நேற்று ஆவேச கருத்து வெளியிட்டார்.

    அப்போது அவர், “ரஷியாவிடம் இருந்து சீனா போர் விமானங்களையும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் வாங்க முடிவு எடுத்தது, வழக்கமான நடவடிக்கைதான். இறையாண்மை கொண்ட இரு நாடுகள் இடையேயான ஒரு ஒத்துழைப்பு செயல்தான். இதில் தலையிட அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று கூறினார்.

    மேலும், “அமெரிக்காவின் அணுகுமுறையானது, சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளின் ஒரு அப்பட்டமான மீறல் ஆகும். ஒரு மேலாதிக்கத்தின் முழுமையான வெளிப்பாடும் ஆகும். இரு நாடுகள் மற்றும் இரு ராணுவங்கள் இடையேயான உறவுகளில் கடுமையான மீறலும்கூட” எனவும் தெரிவித்தார். 
    ×