என் மலர்

    நீங்கள் தேடியது "Chicken"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
    • விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம், தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மற்றும்கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்நிலையில் கறிக்கோழி விற்பனை நுகர்வு குறைவால், விற்பனையில் மந்தம் ஏற்பட்டு கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

    கடந்த புரட்டாசி மாதத்தால் கறிக்கோழி நுகர்வு குறைந்து கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டது. பின்னர் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகைகளால் கறிக்கோழி விற்பனை சரிவு ஏற்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை, இன்னும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் கொள்முதல் விலையும் உயரவில்லை. இந்த நிலையில் தற்போது கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ. 90 வரை செலவாகும் நிலையில் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் திருமணம், போன்ற விழாக்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் , பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது .

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அப்போது கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .அதன்படி கறிக்கோழி விலை இன்று 91 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
    • கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோழிக்கறி விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது. 

    இதில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது:- கறிக்கடைகளில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் கெட்டுப் போன கோழிகளை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. புரத சத்துள்ள சுகாதாரமான கோழிகளை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    அதேபோல் கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ,கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சின்னச்சாமி, ஆலோசகர் ராம்ஜி மற்றும் நிர்வாகிகள், கறி கடை விற்பனையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த 14-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் படிப்படியாக ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20% குறைத்துள்ளது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் ஆகும். முட்டை கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.
    • 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் நேற்று இரவு சிலர் சிக்கன் சாப்பிட சென்றுள்ளனர்.

    அது சாப்பிட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசவே,இது பற்றி கடை பணியாளர்களிடம் கேட்க, அவர்கள் மொழி தெரியாமல் எதையும் கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை செய்ததில் 30லிருந்து 40 கிலோவிற்கும் அதிகமாக பழைய சிக்கன் குளிர்சாதன பெட்டியில் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது போன்று நகரில் உள்ள அனைத்து சில்லி சிக்கன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உடல் நலம் காக்க வேண்டும், ஆண்மைக்குறை, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    ஆண்மைக்குறை, குழந்தையின்மை... பெருவாரியாகக் காணப்படும் இந்தப் பிரச்னை ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உணவுப்பழக்க வழக்கங்களைத்தான் மிக முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள், மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக, விரைவு உணவுகளும் (ஃபாஸ்ட் புட்) மற்றும் பிராய்லர் சிக்கன் உணவுகளைச் சாப்பிடுவதால் இந்தக் குறைபாடு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.

    கறிக்கோழிகளால் உடல்பருமனில் தொடங்கி மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறை, மாதவிடாய்ச் சிக்கல், புற்றுநோய் என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

    எண்ணி நாற்பதே நாள்களில்  ஒரு கோழிக்குஞ்சு முழு கோழியாகிறது. இதற்கு அந்த கோழிகளின் தீவனத்தில் 12 விதமான ரசாயனங்கள் கலக்கப்படுவது முதல் காரணம். மேலும் சீக்கிரம் வளர வேண்டுமென்பதற்காக ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசியானது செல்களை வேகமாக வளர வைத்து கோழியின் எடையை அதிகமாக்கவும் உதவுகிறது. கறிக்கோழிகள் சீக்கிரம் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுவிடுகிறார்கள்.

    அடுத்ததாக அந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அளவுக்கதிகமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாட்டிக் என்பது நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்பது நமக்குத்தெரியும்; ஆனால் இந்த கோழிகளுக்கு அதிகமாக ஆன்டிபயாட்டிக் கொடுப்பதால் அவையும் நோய்வாய்ப்பட்டு அவற்றைச் சாப்பிடும் மனிதர்களையும் நோய்வாய்ப்படச் செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை!

    நமது உடல் செயல்பாட்டுக்கு ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கின்றன. அவை குறைந்தாலும் பிரச்சனைதான்; அளவு கூடினாலும் பிரச்சனைதான். அந்தவகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் செலுத்தப்படும் கறிக்கோழிகளைச் சாப்பிடும்போது அவை சமைத்தபிறகு அது நிலைமாறாமல் அப்படியே உடலுக்குள் செல்வதால் ஆண், பெண் இருவருக்கும் பிரச்சனைதான்; குறிப்பாக ஆண்களுக்குத்தான் அதிக பிரச்சனை.



    மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டுதலால் சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பெண்கள் பருவமடைய முக்கியக் காரணம். அவை இந்த கறிக்கோழிகளின் உபயத்தால் நம் உடலில் பல மடங்கு அதிகமாகச் செல்வதால்தான் இன்றைக்கு சின்னஞ்சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்கள். ஆக, ஆண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆண்மையை வளர்ப்பதற்குப் பதிலாக பெண்மைத்தன்மையை ஏற்படுத்துகிறது.

    ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் வேலை அதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் குறிப்பாக, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழித்தொழிக்கப்படுகிறது. கோழிகளின் தசை வளர்ச்சிக்காகச் செலுத்தப்படும் ஊசிகள் உயிரணுக்களை அழிக்கும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது. அது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. பிராய்லர் சிக்கனுக்குப் பதிலாக நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவது நல்லது. அவற்றைச் சாப்பிடுவதால் ஆண்மைக்குறை ஏற்படுத்துமோ என்று அச்சப்படத்தேவையில்லை.

    புழு, பூச்சிகளையும், இலைதழைகளையும் சாப்பிட்டு வளரும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதால் எந்தக்கெடுதலும் ஏற்படாது என்பதைப் புரிந்துகொண்டு நாட்டுக்கோழிக்கறியை வாங்கிச் சாப்பிடுவோம், நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம். ஆண்மைக்குறை ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால் இனி நாட்டுக்கோழிக்கறியையே சாப்பிடுவதே நல்லது. அதேபோல் நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது. நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாக இருக்கும். பொதுவாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, கொழுப்பு, ஃபோலிக்  அமிலம் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நாட்டுக் கோழிகளுக்கும் ஹார்மோன் மருந்து செலுத்தி வளர்ப்பதாக செய்தி வருகிறது. எனவே, கவனத்துடன் இருப்பது நல்லது.

    கோழிகளின் கால்பகுதியில்தான் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்கின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் அமெரிக்கர்கள் கோழியின் கால்களை வெறும் கழிவுப்பொருளாகவே கருதி அவற்றைச் சாப்பிடுவதில்லை. ஆனால், நாம் விரும்பி வாங்கி ருசிப்பது `லெக் பீஸ்' எனப்படும் கோழிக்கால்களைத்தான்! 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புரட்டாசி மாதத்தில் பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடிப்பதால் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்து உள்ளது. #Purattasi
    சென்னை:

    புரட்டாசி மாதத்தை புனித மாதமாக கருதி வழிபடுகிறார்கள். குறிப்பாக பெருமாள் பக்தர்கள் விரதம் கடைபிடித்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த மாதத்தில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை தவிர்த்து சைவ உணவு வகைகளையே சாப்பிடுகிறார்கள்.

    இதனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. விற்பனை இல்லாததால் அவற்றின் விலை குறைந்துள்ளது.

    புரட்டாசி மாதம் தொடங்கிய பிறகு சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மீன் மொத்த விற்பனை விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை குறைந்துவிட்டது.

    இதுபற்றி தென் இந்திய மீனவர்கள் நல சங்க தலைவர் கே.பாரதி கூறுகையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சராசரியாக நாள்தோறும் 150 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதே அளவுக்கு மீன்கள் வரத்து இருந்தாலும் சில்லரை வியாபாரிகள் குறைந்த அளவிலேயே வாங்கிச்செல்கின்றார்கள். புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை குறைந்துவிட்டது’’ என்றார்.

    சில்லரை விற்பனையில், பாறை மீன் கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. தற்போது ரூ.120 ஆக குறைந்துள்ளது. ரூ.300 ஆக இருந்த ஷீலா மீன் ரூ.120 ஆகவும், பெரிய வஞ்ஜிரம் கிலோ ரூ.1000த்தில் இருந்து ரூ.500 ஆகவும், சிறிய வஞ்ஜிரம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.300 ஆகவும், நெத்திலி மீன் ரூ.200 ஆகவும் விற்றது ரூ.100 ஆகவும் குறைந்துள்ளது.

    சென்னையில் மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை குறைந்துவிட்டதுபோல் வீடுகளில் நேரடியாக மீன் விற்பனை செய்வதும் குறைந்துவிட்டது.

    இதுபற்றி மீன் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வழக்கமான விற்பனையில் 50 சதவீதம் குறைந்துவிட்டது. தினமும் 3 கூடை மீன்கள் காசிமேட்டில் இருந்து வாங்கிச் சென்று வீடுகளில் விற்பனை செய்தேன். இப்போது 2 கூடை மீன்கள் கூட விற்பனையாவது இல்லை. விலையை குறைத்து கொடுத்தாலும் வாங்கும் மக்கள் குறைந்துவிட்டார்கள் என்றார்.

    இதேபோல் கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பனையும், விலையும் குறைந்துவிட்டது. ஆட்டுக்கறி சில்லரை விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ஓட்டல்களுக்கு வழக்கம் போல் பிராய்லர் சிக்கன் உயிருடன் சப்ளை செய்கிறோம். ஆனால் அவற்றின் விலை 2 வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 குறைந்துவிட்டது. ரூ.220 ஆக விற்ற பிராய்லர் சிக்கன் ரூ.180 ஆக குறைத்து கொடுக்கிறோம். ஆனால் ஆட்டுக்கறி விலை சிறிதளவே குறைந்து இருக்கிறது. ஆடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறைந்து விட்டது. இதனால் அதன் தேவை அதிகரித்து இருப்பதால் விலை குறையவில்லை என்றார்.

    ஆட்டுக்கறி சென்னையில் பல இடங்களில் கிலோ ரூ.600க்கு விற்கப்படுகிறது. ஓட்டல்களில் மீன், சிக்கன், மட்டன் விற்பனை கணிசமான அளவுக்கு குறைந்துவிட்டது. பிரியாணி கடைகளிலும் விற்பனை குறைந்துவிட்டது. அதே சமயம் சைவ ஓட்டல்களில் விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண சைவ ஓட்டல்களில் கூட இருமடங்கு விற்பனை கூடியுள்ளது. #Purattasi

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று பார்க்கலாம்.
    சிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா? உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு.

    பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை இரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.

    பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.

    சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் அமைகின்றது.



    பாக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு தொண்டையில் டான்சில், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி விடுகின்றது. ஜீரணக்கோளாறுகளை உருவாக்கி விடுகின்றது.

    சிக்கன் மூலமாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

    பிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    கர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp