பறவை காய்ச்சல் எதிரொலி... கோழி இறைச்சி விலை கடும் வீழ்ச்சி!

பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் வைரஸ் பரவுகிறது. பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
பறவை காய்ச்சல் எதிரொலி... கோழி இறைச்சி விலை கடும் வீழ்ச்சி!
Published on

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது.பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

மேலும், அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்துகள் மற்றும் கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும். தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com