என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chicken roll"
- வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
- எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.
ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட்- 6
வெங்காயம்- 1
தக்காளி-1
சிக்கன் - கால் கிலோ
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்
மல்லி தூள்- கால் டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்
மொசரல்லா சீஸ்- 100 கிராம்
செய்முறை:
முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.
இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.
சப்பாத்தி - 4,
முட்டை - 4,
சிக்கன் (எலும்பு இல்லாதது) - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகுதூள் - கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.
அரைக்க:
மிளகு - கால் டீஸ்பூன்,
சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) - கால் டீஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 3 பல்,
பட்டை - 1.
செய்முறை :
சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து, எண்ணெயில் நன்கு வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.
முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.
தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும்.
வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்