search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lunch recipes"

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச பாக்சில் கொடுத்து அனுப்ப அவித்த முட்டை சாதம் சிறந்தது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - பாதியளவு
    வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை (அலங்கரிக்க) - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கொள்ளவும்.

    அவித்த முட்டையில் பாதியைச் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

    அடுத்து அதில் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    இதனுடன் உப்பு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    இப்போது வெட்டி வைத்திருக்கும் அவித்த முட்டையைச் சேர்த்து, மஞ்சள் கரு மசாலாவுடன் நன்றாகக் கலக்கும்வரை கிளறவும்.

    வேகவைத்த சாதம் சேர்த்துக் கலந்து எடுக்கவும் (ஃப்ரைடு ரைஸ் செய்வது போல நன்றாகக் கிளறிவிட்டு எடுக்க வேண்டும்).

    இறுதியில் இன்னும் கொஞ்சம் கொத்தமல்லித்தழை தூவிக் கிளறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் இந்த முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோலை வைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சப்பாத்தி - 4,
    முட்டை - 4,
    சிக்கன் (எலும்பு இல்லாதது) - 150 கிராம்,
    பெரிய வெங்காயம் - 1,
    மிளகுதூள் - கால் டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    உப்பு - சுவைக்கேற்ப.

    அரைக்க:

    மிளகு - கால் டீஸ்பூன்,
    சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) - கால் டீஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 3 பல்,
    பட்டை - 1.



    செய்முறை :

    சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து, எண்ணெயில் நன்கு வதக்குங்கள்.

    பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள்.

    முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள்.

    தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும்.

    வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×