என் மலர்
நீங்கள் தேடியது "Chicken Fry"
- ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கான ஸ்பெஷல் டிஷ்!
- கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில் சேர்க்க வேண்டும்.
சிக்கன் பிரியர்களுக்காகவே தனித்துவமான சுவையுடன், ஆரோக்கியம் நிறைந்த ஓர் உணவுதான் ''கறிவேப்பிலை சிக்கன் ரோஸ்ட்''. கலப்படமற்ற, இயற்கையான சுவையுடன் கூடிய உணவுகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு. வழக்கமான சிக்கன் உணவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இதன் தனித்துவமான மணமும், கறிவேப்பிலையின் ஆரோக்கியமும் இணைந்து ஒரு புதுமையான சுவையை வழங்குகிறது. ஆரோக்கியத்தையும், சுவையையும் விரும்பும் அசைவப் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான இந்த உணவை, செயற்கை நிறமூட்டிகள் இல்லாமல், முற்றிலும் இயற்கையான முறையில் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சாந்தம் செய்து காட்டுகிறார்.
கறிவேப்பிலை கோழி ரோஸ்ட் செய்முறை
* முதலில் கறிவேப்பிலை மசாலாவைத் தயார் செய்ய வேண்டும். ஒரு வாணலியில் சிறிது உளுந்தை வறுக்கவும். பின்னர், அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து, அதன் நிறம் மாறாமல் மொறுமொறுப்பாகும்வரை வறுத்து எடுக்கவும். அதனை ஆறவைத்த பிறகு, மிக்ஸியில் போட்டுப் பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
* அடுத்து சமைக்கத் தொடங்குவோம். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்.
* தாளித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும், சுத்தம் செய்து வைத்திருக்கும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும்.
* சிக்கன் துண்டுகளை நன்றாக வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் முழுமையாக வெந்த பிறகு, தண்ணீர் வற்றி, எண்ணெய் தனியாகப் பிரியும்.
* இந்த சமயத்தில், நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கறிவேப்பிலை பொடியைச் சேர்த்து, சிக்கனுடன் நன்றாகக் கலக்கவும். பொடியை சேர்த்தவுடன் அதிக நேரம் வேகவிட வேண்டாம். வெகு நேரம் வேகவிட்டால், கறிவேப்பிலையின் நிறம் மாறி கருப்பாகிவிடும்.
* கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும்.
சிறப்பு குறிப்பு: கறிவேப்பிலைப் பொடியை, சிக்கன் முழுமையாக வெந்த பிறகு கடைசியில்தான் சேர்க்க வேண்டும். முதலில் சேர்த்தால், சமைக்கும்போது கறிவேப்பிலையின் நிறம் மாறிவிடும்.
- அலாதியான சுவையைக் கொண்டது கோழி நெய் ரோஸ்ட்!
- கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூருவின் பிரபல உணவு!
சமையல் உலகில் எப்போதும் புதுமைகளும், பாரம்பரிய சுவைகளும் சந்திக்கும் தருணங்கள் உண்டு. அப்படியான ஒரு அலாதி சுவையைத் தன்னகத்தே கொண்டதுதான் கோழி நெய் ரோஸ்ட். கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியான மங்களூரைச் சேர்ந்த இந்த உணவு, அதன் தனித்துவமான சிவப்பு நிறத்திற்காகவும், வாயில் கரையும் சுவைக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இந்த சுவையான சிக்கன் ரெசிபியை சமையல் கலைஞர் கதிரவன் நமக்காக செய்து காட்டியுள்ளார்.

செய்முறை விளக்கம்
காஷ்மீரி மிளகாய் விழுது தயாரித்தல் :
* முதலில் ¼ கிலோ காஷ்மீரி மிளகாயை நன்கு கழுவி, தண்ணீரில் வேகவைக்க வேண்டும்.
* வேகவைத்த இந்த மிளகாயைத் தண்ணீர் வடித்துவிட்டு, பசை போல அரைத்து எடுக்கவும்.
* காஷ்மீரி மிளகாய் காரம் குறைவாக இருந்தாலும், அற்புதமான சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும், இந்த விழுதை எண்ணெயில் வதக்கி வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்! இந்த விழுதுதான் நாம் தயாரிக்க உள்ள கோழி நெய் ரோஸ்டிற்கான அடிப்படைச் சுவையாகும்.
கோழி நெய் ரோஸ்ட் செய்முறை :
* ஒரு வாணலியை எடுத்து, அதில் 2 கரண்டி நெய் சேர்க்கவும்.
* நெய் சூடானதும், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும்.
* பச்சை வாசனை நீங்கியவுடன், நாம் தயாரித்து வைத்திருக்கும் காஷ்மீரி மிளகாய் விழுதில் 2 தேக்கரண்டியை வாணலியில் சேர்க்கவும்.
* இந்த மிளகாய் விழுதை நன்கு வதக்க வேண்டும். சமைக்கும்போது விழுதிலிருந்து நெய் தனியாகப் பிரிந்து வரும். இதுதான் சரியான பதம்!
* இப்போது, மிளகுப் பொடி (¼ தேக்கரண்டி), மஞ்சள் தூள் (½ தேக்கரண்டி), சீரகப் பொடி (½ தேக்கரண்டி) ஆகியவற்றைச் சேர்த்து உடனடியாகக் கிளறவும்.
* மசாலாக்களைக் கலந்த உடனே, வெட்டி வைத்திருக்கும் கோழியை வாணலியில் சேர்க்கவும். இந்தக் கலவையில், நாம் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை; நெய்யே பச்சை வாசனையை நீக்கிச் சரியாகச் சமைத்துவிடும்.
* கோழியை மசாலாவுடன் நன்கு கிளறிய பின், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சிறிதளவு தண்ணீரை மட்டும் தெளித்து மீண்டும் கிளறி, வாணலியை ஒரு மூடியால் மூடவும்.
* மூடி போட்டு வேகவைக்கும் போது, அடுப்பை அப்படியே குறைந்த தீயில் (Low Flame) வைக்கவும்.
* சிறிது நேரம் கழித்துத் திறந்து பார்த்தால், சுவையான கோழி நெய் ரோஸ்ட் தயாராகியிருக்கும்! இந்த ரெசிபி, மிளகாயை வேகவைத்து செய்வதால், அதிக காரம் இல்லாமலேயே அற்புதமான நிறத்தையும் மணத்தையும் தரும்.
கோழி நெய் ரோஸ்ட்டின் பலன்கள்
* கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளை வலுப்படுத்தவும் அத்தியாவசியமானது.
* இதில் சேர்க்கப்படும் நெய் (Ghee) ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், ஆற்றல் மூலமாகவும் செயல்படக்கூடியது.
* காஷ்மீரி மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
* இஞ்சியும், சீரகமும் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய பாரம்பரிய மூலிகைகள் ஆகும்.
இந்த விரைவான மற்றும் சுவையான கோழி நெய் ரோஸ்ட், உங்கள் சமையல் அட்டவணையில் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவாகும். இது சிறந்த ஸ்டார்ட்டர் ஆகவோ, அல்லது சப்பாத்தி போன்றவற்றுடன் மெயின் கோர்ஸாகவோ சேர்த்து உண்ண ஏற்ற ரெசிபியாகும். இதைச் செய்து பார்த்து, மங்களூரின் மணக்கும் சுவையை உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள்!
- மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி.
- மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம்- 2 (நறுக்கியது)
தக்காளி- 2 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தனியா- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
முந்திரி பருப்பு- 10
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
லவங்கம்- 3
பட்டை - 2
ஏலக்காய்- 2
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போட வேண்டும். வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை போட்டு அனைத்தையும் கலந்து வறுக்க வேண்டும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். வேண்டும் என்றால் சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்.
மற்றொரு பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கனில் முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.
சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சைப்பழம் - அரை பழம்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5 கிராம்
குடைமிளகாய் - 50 கிராம்
வெங்காயத்தாள் - சிறிதளவு
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

செய்முறை :
கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.
எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.
சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.
சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.
அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.
சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
முட்டை - 1
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு

செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.
பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.
இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி!!!
இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
சிக்கன் - அரை கிலோ
தயிர் - 175 மில்லி (ஒரு தம்ளர்)
தந்தூரி மசாலா - சிறிதளவு
தந்தூரி கலர் பொடி - ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் - ஒன்று
வறுத்து அரைத்த தனியா, சீரகம், மற்றும் அரைத்த இஞ்சி மற்றும் பூண்டு போன்றவை - தலா ஒரு சிறிய தேக்கரண்டி.
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கோழி இறைச்சியில் தோலுரித்து நான்கு துண்டுகளாக்க வேண்டும்.
கூரிய கத்தியை கொண்டு ஒவ்வொரு துண்டிலும் 2, 3 இடங்களில் கீறி விடலாம்.
வறுத்து அரைத்த தனியா, சீரகம் மற்றும் அரைத்த இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு ஆகியவற்றை இறைச்சியில் பூசி தந்தூரி கலர் பொடி, தந்தூரி மசாலா கலந்து தயிருடன் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மறுநாள் தந்தூரி ஓவன் அல்லது கம்பி வலை அடுப்பு மீது வைத்து தணலில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வாட்டி எடுக்கவும்.
பின்னர் எலுமிச்சம் பழத்தை வாட்டப்பட்ட இறைச்சி மீது பிழிந்துவிட்டு சூடான தந்தூரி சிக்கனை பரிமாறவும்.
தந்தூரி சிக்கன் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
ரொட்டி தூள் - 150 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு, இஞ்சி அரைப்பு, மக்காச்சோள மாவு, உப்பு போன்றவை தேவையான அளவு
வினிகர், சோயா சாஸ் - 1 சிறிய தேக்கரண்டி
மிளகாய் தூள் - தேவையான அளவு
தயிர் - 3 தேக்கரண்டி

செய்முறை :
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சி, பூண்டுக்கலவையில் துண்டாக்கப்பட்ட இறைச்சியை போட்டு மிளகாய்த்தூள், தயிர், வினிகர், சோயா சாஸ், மக்காச்சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இறைச்சி துண்டுகளை அதில் இருந்து எடுத்து ரொட்டி தூள் மீது பரப்பவும். அப்படியே இறைச்சி துண்டுகளை கொதிக்கும் எண்ணெயில் வறுத்தெடுத்து, சூடாக பரிமாறலாம்.
இது மொறு மொறுப்பாகவும் வாசனையுடனும் இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






