என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intoxication"

    • இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
    • விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை அதிகாரிகள் கவனித்தனர்.

    கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.

    வான்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

    விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும்.

    விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள இடத்திற்கு சென்று மது அருந்தி போதை அதிகமாகி கிடந்தார்.
    • புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் அய்யமபேட்டையை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்தார்.

    பின்னர் ஒரு டாஸ்மாக்கில் மது வாங்கினார்.

    அப்போது தஞ்சையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாகையை சேர்ந்த அருண் (25) என்பவரும் அதே கடையில் மது வாங்கினார்.

    அப்போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கீழவாசல் எஸ்.என்.எம். நகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்திதுக்கு சென்று மது அருந்தினர்.

    இதில் சதாம்உசேன் போதை அதிகமாகி கிடந்தார்.

    இதனை பயன்படுத்திய அருண், மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு தப்பினார்.

    போதை தெளிந்ததும் சதாம் உசேன் தனது மோட்டார் சைக்கிளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் மோட்டார் சைக்கிளை அருண் திருடியது தெரியவந்தது.

    இது பற்றி சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருணை கைது செய்தனர்.

    ×