search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pilot"

    • விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.
    • விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    நியூசவுத்வேல்ஸ்:

    ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர். முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

    இந்த நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.

    உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணித்த முதியவர் கூறியதாவது:-

    எங்களுக்கு சூழல் புரிந்தது. நடுவானில் பறக்கிறோம். லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. எங்களால் கீழே இறங்க முடியாது. அடுத்து சில நிமிடங்களில் நாங்கள் உயிரோடு இருப்போமா? என்று கூட தெரியாது. இந்த நேரத்தில் விமானியால் மட்டுமே எங்களை காப்பாற்ற முடியும். அதை அவர் செய்தும் காட்டினார்.

    எங்கள் விமானம் விமான நிலையத்தை 2 மணி நேரமாக சுற்றி வந்தது. காரணம் விமானத்தின் எரிபொருள் காலியாக வேண்டும். லேண்டிங் கியர் இல்லாத நேரத்தில், தரை யிறங்கும் போது விமானத்தின் இறக்கைகள்தான் முதலில் அடிவாங்கும். இறக்கையில்தான் எரிபொருள் இருக்கிறது. அதனால் தரையிறங்கும் போது தீப்பற்றி எரிய வாய்ப்பு உள்ளது.

    எனவே விமானி எரிபொருள் முழுவதையும் தீர்த்துவிட்டு, கீழே இறங்க முயன்றார். அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானியின் திறமை மிகவும் அற்புதமானது. எங்களுக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    • விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கினர்.

    153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அதை இயக்கிய விமானிகள் இருவர் அரை மணி நேரம் உறங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி படிக் ஏர் விமானத்தின் விமானம் ஒன்று சென்றது. அதை இயக்கிய விமானி மற்றும் இணை விமானி இருவரும் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 2 மணி 35 நிமிடத்தில் ஜகார்டாவில் தரையிறங்க வேண்டும். இந்த பயணத்தின் போது விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி தன்னுடன் காக்பிட்-இல் இருந்த இணை விமானியிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். இணை விமானி அதற்கு அனுமதி அளித்ததால், விமானி உறங்கியுள்ளார். அனுமதி அளித்த இணை விமானியும், சிறிது நேரத்திலேயே அசதி காரணமாக உறங்கியுள்ளார். 28 நிமிடங்கள் விமானி மற்றும் இணை விமானி உறங்கியுள்ளனர்.

    இருவரும் உறங்கி கொண்டிருந்த போது, ஜகார்டா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானியை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இருவரும் உறங்கி கொண்டிருந்ததால், விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 28 நிமிடங்கள் உறங்கிய இணை விமானி அதன் பின்னர் விழித்துக் கொண்டு விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார்.

    இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • விமானம் மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது
    • நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி திடீரென மயங்கி விழுந்தார்

    தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு சிலி. இதன் தலைநகர் சான்டியாகோ.

    சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் 'லாட் ஆம் விமான நிறுவனம்.

    இதன் வர்த்தக விமானமான LA505  அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    இந்த விமானத்தை தலைமை விமானியான 56 வயதான கேப்டன் இவான் ஆண்டர் என்பவர் இயக்கினார். ஆண்டர் 25 வருடங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.

    மியாமியிலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் டாய்லெட் அறைக்கு ஆண்டர் சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இது தெரிய வந்ததும் உடனடியாக துணைவிமானி விமானத்தை இயக்கினார்.

    அதே நேரம், ஆண்டருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சையும் விமானத்தின் உள்ளே இருந்த குழுவால் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

    இதனால் விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவின் டாகுமென் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அவரை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக மருத்துவ நிபுணர் குழு ஒன்று அந்த விமானத்தை அடைந்து அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்க முற்பட்டது. பரிசோதனையில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிய வந்தது.

    அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது.

    அவரது இறப்பு குறித்து விமான நிறுவனம் அறிவித்திருப்பதாவது:

    "ஆண்டரின் உயிரை காப்பாற்ற விமானத்தின் உள்ளே அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டது. இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். அவரது இறப்புக்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்."

    இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.

    விமானத்தின் உள்ளேயே எதிர்பாராதவிதமாக தலைமை விமானி உயிரிழந்ததும், விமானம் துணை விமானியால் இயக்கப்பட்டு பத்திரமாக தரையிறங்கியது சிலி நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.

    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
    • விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    லாஸ்ரியோஸ்:

    ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.

    பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

    விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

    தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது.
    • விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறியிருக்கிறார்.

    துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் காக்பிட்டில் தனது பெண் தோழியை பயணிக்க செய்த விமானி மூன்று மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ஏர் இந்தியாவுக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

     

    "விமான பயணி ஒருவரை காக்பிட்டிற்குள் அனுமதித்து பயணம் செய்ய வைத்த விமானியின் செயல் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளுக்கு எதிரானது. பாதுகாப்பு விதிகளை மீறிய இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் முறையான நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டது," என்று டிஜிசிஏ தெரிவித்து இருக்கிறது.

    "மிக முக்கியமான பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாமல், முறையான நடவடிக்கை எடுக்க தவறிய ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் விமானத்தை இயக்கிய விமானி தனது அதிகாரத்தை கொண்டு விமான விதிகள் 1937-ஐ மீறிய குற்றத்திற்காக மூன்று மாதங்களுக்கு பணிஇடைநீக்கம் செய்யப்படுகிறார். இந்த விதிமீறலை தடுக்காமல் இருந்த துணை விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது," என்று டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

    குடி போதையில் விமானம் ஓட்டியதற்காக லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட விமானிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்திய இயக்குனர் பதவி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #AirIndia #ArvindKathpalia
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 9-11-2018 அன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த கேப்டன் அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரவிந்த் கத்பாலியா மூத்த விமானியாக மட்டுமில்லாமல் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனராகவும் பதவி வகித்து வந்தார்.

    அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியது.

    இதேபோல் 11-11-2018 அன்றும் டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தை ஓட்டச் சென்றபோது நடத்திய பரிசோதனையிலும் போதையில் இருந்ததாக இவர் சிக்கினார்.

    இதன் விளைவாக விமானிகளுக்கான விதி எண் 24-ஐ மீறி நடந்துகொண்ட குற்றத்துக்காக அரவிந்த் கத்பாலியா அடுத்த மூன்றாண்டுகளுக்கு விமானம் ஓட்ட தடை விதித்தும், அவரது விமானி லைசென்சை அதுவரை ரத்து செய்தும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.



    இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்கங்கள் (போக்குவரத்து) துறை இயக்குனர் பதவியில் இருந்தும் இன்று அவர் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், அரவிந்த் கத்பாலியா ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு பிராந்திய இயக்குனராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.  

    ஏர் இந்தியாவின் வடக்கு பிராந்திய இயக்குனர் பங்கஜ் குமார் 30-4-2019 அன்றுடன் பணிஓய்வு பெறுவதால் 1-5-2019 முதல் அந்த பதவியில் அரவிந்த் கத்பாலியா நியமிக்கப்படுகிறார் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குடிபோதையில் விமானம் ஓட்டி தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டதற்கு இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக, அந்த சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பலமான அரசியல் தொடர்பும், செல்வாக்கும் உள்ள நபர்கள் எத்தகையை குற்றங்களில் இருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் என்பது தற்போது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

    சட்டத்தை மீறியதற்காக குற்றப்பத்திரிகை நிலுவையில் உள்ள ஒருநபர் மற்ற பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க முடியாது. மேலும், முன்னர் அரவிந்த் கத்பாலியா மீதான போலீஸ் விசாரணையின்போது அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் வாய்ப்பு உள்ளதால் இந்த நியமனத்தை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. #preflight #alcoholtest #AirIndia #ArvindKathpalia #AirIndiaRegionalDirector 
    டெல்லியைச் சேர்ந்த விமானி ஒருவர், தனக்கு சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #PilotRohan
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்தவர் ரோகன் பாசின் (33). இவர் விமானி ஆக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டெல்லியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் இவர் சேர்ந்தார்.

    அப்போது அவருக்கு சுதா சத்யன் என்ற ஆசிரியை எழுத படிக்க கற்றுக் கொடுத்தார். தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட அவரை கவுரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

    விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான கேப்டன் ஆக உயர இவரே காரணம் என பெருமையுடன் கூறினார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் ஆனந்த கண்ணீருடன் தனது மாணவர் கேப்டன் ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.

    கேப்டன் ரோகனின் தாயார் அவர் ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட போட்டாக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது விளையாட்டு பள்ளியில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும்.

    தனது மகன் ரோகன் விளையாட்டு பள்ளியில் சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.

    கேப்டன் ரோகன் வசதி படைத்த பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கும், விமானத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரது தாத்தா ஜெய்தேவ் பாசின் 1951-ம் ஆண்டில் முதன் முதலில் 7 விமானிகள் கமாண்டர்கள் ஆனார்கள். அவர்களில் இவரும் ஒருவர்.

    இவரது பெற்றோரும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள். ரோகன் பிளஸ்-2 படிக்கும் போதே விமானி ஆனார். 2007-ம் ஆண்டில் இணை விமானி ஆக பொறுப்பேற்றார். #PilotRohan
    பாகிஸ்தான் பிடியில் இருக்கும் விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்ப நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #IndiaPakistanWar #Abhinandan #AkhileshYadav
    லக்னோ:

    பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரித்து வருகிறது.

    இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று வெளியிட்ட தன்னுடைய டுவிட்டர் செய்தியில், பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு மனஉறுதி மற்றும் தைரியத்தை வழங்கவும் கடவுளிடம் நான் வேண்டி கொள்கிறேன். இந்த நாடும், நாட்டு மக்களும் அவருக்கு எப்போதும் துணை நிற்பார்கள் என்று கூறியுள்ளார்.



    மேலும் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களின் தீரச்செயலுக்கு அகிலேஷ் யாதவ் பாராட்டும் தெரிவித்தார். #IndiaPakistanWar #Abhinandan #AkhileshYadav 
    டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Flight

    பாட்னா:

    டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு ‘கோ ஏர்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 150 பேர் பயணம் செய்தனர்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென எழுந்தார். பின்னர் கழிவறை என நினைத்து விமானத்தின் பின்புற கதவை திறக்க முயன்றார்.

    அதைபார்த்த சக பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அங்கு வந்த விமான ஊழியர் அந்த பயணியை தடுத்து நிறுத்தினார். கேபின் அறையின் காற்றழுத்தம் அதிகமாக இருந்ததால் விமானத்தின் கதவை திறக்க முடியவில்லை. இல்லாவிடில் மிகப்பெரிய விபத்து நடந்திருக்கும்.

    இச்சம்பவம் கடந்த 22-ந்தேதி நடந்தது. இதற்கிடையே விமானம் இரவு 7.35 மணிக்கு பாட்னா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதையடுத்து அந்த வாலிபர் தொழிற் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அஜ்மீரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிவது தெரியவந்தது.

    முதல் விமான பயணம் என்பதால் கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முயன்றதாக கூறினார். வேறு பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இல்லை என்றார். #Flight

    கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் பயணித்த விமானத்தின் கோளாறுக்கு விமானியின் தவறே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் என்று தெரிய வந்தது. #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஊப்ளிக்கு விமானத்தில் சென்றார்.

    விமானம் ஊப்ளியை சென்றடைந்ததும் 40,935 அடி உயரத்தில் பறக்கும் வகையில் தானியங்கி மூலம் புரோகிராம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் விமானி அதை தானியங்கிக்கு மாற்றி உயரத்தை குறைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு பதில் 24 செகண்டுகள் முன்கூட்டியே இயக்கினார்.

    இதனால் விமானம் திடீர் என்று 735 அடி உயரத்துக்கு இறங்கியது. விமானம் பயங்கரமாக குலுங்கியது. இதனால் விமானிகள் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும் விமானிகள் சாமர்த்தியமாக இயக்கி விமானத்தை பத்திரமாக தரை இறக்கினர்.

    இதுபற்றி விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதில் விமானியின் தவறே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் என்று தெரிய வந்தது. நேற்று இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

    அதில், தானியங்கி கட்டுப்பாட்டு கருவிகளை விமானி மாற்றி அமைத்து, தானே இயக்கும் போது அதனால் ஏற்பட்ட தாமதமே தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்றும், எனவே சம்பந்தப்பட்ட விமானிக்கு அது தொடர்பான பயிற்சியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
    காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் முதன் முறையாக விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். #IramHabib
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் பெண் இராம் ஹபீப் (31). இவர் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளார்.

    அதை தொடர்ந்து இவர் ஏர் இண்டியா விமானத்தில் விமானி ஆக அடுத்த மாதம் பொறுப்பு ஏற்கிறார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் முஸ்லிம் பெண் விமானி என்ற பெருமையை பெறுகிறார்.

    இவர் நினைத்தவுடன் விமானி ஆகவில்லை. வனவியல் துறையில் ஆய்வு செய்து பட்டயம் பெற வேண்டும் என்ற குழந்தை பருவ கனவு இவருக்கு இருந்தது. எனவே டேராடூனில் படித்து அதற்கான பட்டம் பெற்றார்.

    பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஷெரீ காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் விவசாய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பட்டமேற்படிப்பு படித்தார். அதன் பின்னர் அமெரிக்கா சென்று விமான பள்ளியில் சேர்ந்து படித்தார்.

    2016-ம் ஆண்டில் விமானி பயிற்சியை முடித்தார். 260 மணி நேரம் விமானம் ஓட்டிய அவர் அமெரிக்கா மற்றும் கனடாவில் வர்த்தக ரீதியிலான விமானம் ஓட்ட லைசென்சு பெற்றார்.

    தற்போது அவர் டெல்லியில் வர்த்தக விமானி லைசென்சு பெறுபவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியராக இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் ‘ஏர் இண்டியா’ விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    இவருக்கு முன்பு 2006-ம் ஆண்டில் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்த தான்வி ரெய்னா விமானி ஆனார். இதன் மூலம் காஷ்மீரின் முதல் பெண் விமானி என்ற அந்தஸ்தை பெற்றார்.

    காஷ்மீரை சேர்ந்த 50 முஸ்லிம் பெண்கள் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நிறுவன விமானங்களில் பணிப்பெண்களாக உள்ளனர். #IramHabib
    ×