என் மலர்
நீங்கள் தேடியது "டாக்சி"
- பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.
- ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கிறது.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஊபர் (UBER) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆக டாரா கோஸ்ரோஷாஹி உள்ளார். இந்நிறுவனம் கார் டேக்ஸி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தங்கள் பிரதான போட்டியாளராக இருந்த ஓலா (OLA) நிறுவனத்தை முந்தி ராபிடோ (Rapido) நிறுவனம் தங்களுக்கு பிரதான போட்டியாளராக மாறியுள்ளதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, ஓலா நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர், ஓட்டுநர் கமிஷன் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.

மறுபுறம், 2015-ல் துவங்கப்பட்ட ராபிடோ நிறுவனம், முதலில் இரு சக்கர வாகன டாக்சி சேவையை அறிமுகப்படுத்தி சந்தையில் விரைவாக வலுவான இடத்தைப் பிடித்தது. பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் தொடங்கியது.
குறைந்த கமிஷன் கட்டணமே ராபிடோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஊபர் மற்றும் ஓலா 18-22% கமிஷன் வசூலிக்கும் நிலையில், ராபிடோ 0-5% மட்டுமே வசூலிக்கிறது. ராபிடோ தளத்தில் மாதம் 20 லட்சம் ஓட்டுநர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
- இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.
சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார்.
- தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்
- குறைகளை நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.
7 நிமிடம் தாமதாக வந்ததற்காக கால் டாக்சி ஓட்டுனரை பெண் மோசமாக நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து திட்டிய அந்த பெண் ஒரு கட்டத்தில் அவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.
ஆனால் தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். உங்கள் குறைகளை டாக்சி நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.
ஆனால் பெண் அடாவடித்தனமாக நடந்துகொண்டதால் டாக்சியை விட்டுவிட்டு வேறு வழிகளில் பயணத்தைத் தொடருமாறு அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அந்த ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் அவர்களின் உரையாடல் பதிவாகி உள்ள நிலையில் இணையத்தில் பலர் அந்த பெண்ணின் செய்கையை கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.






