search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivasena"

    பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி முதன் முறையாக மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி, மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் போட்டியிடுவது இதுவே முதன்முறையாகும்.



    இது குறித்து சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அசோக் சர்கார் கூறுகையில்,  ‘மேற்கு வங்கத்தில் சிவசேனா சார்பில் போட்டியிடவிருக்கும் 15 வேட்பாளர்களில் 11 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளோம். மீதமுள்ள 4 வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

    மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தலைமை, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசிடம் போட்டியிட முடியாததால் தான், இந்த தேர்தலில் சிவசேனா தனித்து களமிறங்கியிருக்கிறது. மேலும்  திரிணாமுல் காங்கிரசில் இருந்த ஊழல் கறைப்படிந்த தலைவர்கள் பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ளனர்’ என்றார்.

    மேற்கு வங்கத்தின் தம்லுக், கந்தாய், மித்னாபூர், வடக்கு கொல்கத்தா, பராக்பூர், பங்குரா, பராசாத், பீஷ்னுபூர், வடக்கு மல்டா, ஜதாவ்பூர் ஆகிய தொகுதிகளில் இந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தப்போவதாக சிவசேனா கூறியுள்ளது.

    மித்னாபூர் தொகுதியில், பாஜகவின் மாநில தலைவர் திலீப் கோஷ், மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மானஸ் புனியா ஆகியோரை எதிர்த்து அசோக் சர்கார் போட்டியிடுவதாக தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019 #SivasenaContestWestbengal


    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #ParlimentElections#Sivasena
    மும்பை:
     
    மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி அங்கம் வகித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் அந்த கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது. ஆனாலும், சமீப காலமாக மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசை கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி எங்கள் கூட்டணியில் நிச்சயம் இருக்கும் எனபாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.



    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவின் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணி கட்சியான சிவசேனா தலைமையுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் சிவசேனா கூட்டணி வகித்து வருகிறது.

    எனவே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் சிவசேனா கட்சி நிச்சயம் அங்கம் வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவோம் என சிவசேனா கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah #ParlimentElections#Sivasena
    பிரதமர் மோடியை மாவீரன் சிவாஜியுடன் ஒப்பிட்டு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா சிவாஜி மகராஜ் எப்போதும் அரசியல் கலவரங்களில் ஈடுபட்டதில்லை என கூறினார். #Sivaji #Modi #Sivasena
    மும்பை:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். அப்போது அவர் சிவாஜி மகாராஜாவுடன் ஒப்பிட்டு பேசினார்.

    இதற்கிடையே, மகாரஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியினர் யோகி ஆதித்யநாத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.



    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், சிவாஜி மகாராஜா எப்போது அரசியல் கலவரங்களில் எப்போதும் ஈடுபட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

    மேலும், ரபேல் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு மூன்று மடங்கு விலையில்  போர் விமானங்களை வாங்கியுள்ளது வெளியானது. இதற்கு நிச்சயம் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். #Sivaji #Modi #Sivasena
    மத்தியில் பாஜக ஆட்சியில் வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது இந்தியா என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நட்ந்து வருகிறது. அங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்து வருகிறது. ஆனாலும், இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு செயல்படும் விதத்தை சிவசேனா கடுமையாக தாக்கி வருகிறது.

    இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இந்தியா வாழைப்பழ ஜனநாயகமாக மாறி வருகிறது என சிவசேனா கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் கூறுகையில், இந்தியாவில் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. தேசிய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலைப்படாமல் பிசியாக உள்ளார். 

    எரிபொருள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலையோ 100 ரூபாயை நெருங்குகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
      
    விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருள்கள் , சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய திட்டங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என தெரிவித்துள்ளது. #Sivasena #Saamana #BananaRepublic
    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதன் மூலம் சிவசேனாவை வளைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா கட்சி இருந்து வருகிறது.

    இதற்கிடையே, சிவசனோ தலைவர் உத்தவ் தாக்கரே தனது 58-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    உத்தவ் தாக்கரே டுவிட்டரில் இல்லாத போதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தது சிவசேனாவை 
    வளைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தாக்கரேயை சமரசம் செய்ய கடந்த வாரம் அமித்ஷா மும்பை சென்றார். மேலும், பாராளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சிவசேனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi
    மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. #Sivasena #BJP #Modi
    மும்பை:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு பதிலாக மனிதர்களை கொன்று வருகின்றனர் என சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், “நாட்டில் ஆட்சி செய்பவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் விலங்குகளை கொல்வதில்லை. அதற்கு மாறாக, மனிதர்களை கொன்று வருகின்றனர்.

    எப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுவதும், ஆட்சியில் நீடிப்பதும் ஜனநாயகம் அல்ல. பெரும்பான்மை என்பது எப்போதும் நிரந்தரமல்ல. நாட்டு மக்களே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் மோடி அரசை பதவியில் இருந்து கீழே இறக்க முடியாது.  ஒரு வெற்றியில் சந்தேகம் இருந்தால் பெரும்பான்மை பற்றி பேசக்கூடாது. பணம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தல் ஆகியவற்றின் மூலம் வெற்றி அடைவது வெற்றியாகாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sivasena #BJP #Modi
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியினர் புறக்கணித்துள்ளனர். #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை விவாதம் நடத்த அனுமதி அளித்தார். 

    அதன்படி, பாராளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. 

    முன்னதாக, இந்த விவாதத்தில் பங்கேற்பது தொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது. #MonsoonSession #NoConfidenceMotion #Sivasena
    மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    மும்பை:

    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நாளை நடக்கவுள்ளது. 

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் எனகேட்டுக் கொண்டதாக தெரிகிறது.



    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம் என சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு  எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக சிவசேனா எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParlimentMonsoonSession #NoConfidenceMotion #ShivSena
    பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    மும்பை:

    நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



    பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

    ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    மும்பை:

    மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் சிவசேனா கூட்டணி வகித்தாலும், பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி பொய்களை பரப்பி ஆட்சியை பிடித்தார் என குற்றம் சாட்டி பேசினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் சிவசேனா கட்சியின் 52-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது, பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களை ஆட்சியில் அமரவைத்து ஏமாற்றம் அடைந்து விட்டனர்.

    இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் பங்களாவிற்கு அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டு ஒன்றை கண்டதாக சில நிருபர்கள் செய்தி வெளியிட்டனர். அனேகமாக பிரதமர் மோடி தற்போது வேற்று கிரகங்களுக்கு தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறி உள்ளது. அந்த ஆட்சி பயனற்றது என கண்டறிய பா.ஜனதாவுக்கு 3 ஆண்டுகளும், 600 ராணுவ வீரர்களின் உயிரும் தேவைப்பட்டதா?

    பயங்கரவாதத்துக்கு மதத்துடன் சம்பந்தம் இல்லை என்றால், ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் நீங்கள் ஏன் போர் நிறுத்தம் அறிவித்தீர்கள்? விநாயகர் சதுர்த்தி அல்லது தசரா விழாக்களின் போது, பாகிஸ்தான் இதேபோன்ற கொள்கையை பின்பற்றுகிறதா? என குற்றம் சாட்டி பேசினார். #Mumbai #Sivasena #UddhavThackery #PMModi
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் பாஜக முதுகில் குத்திவிட்டது என உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான்  வளர்ச்சி சாத்தியமாகும்.

    எங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,

    பால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    மகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    ×