உத்தவ் தாக்கரேவை வளைக்க முயற்சிக்கும் காங்கிரஸ்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதன் மூலம் சிவசேனாவை வளைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi
உத்தவ் தாக்கரேவை வளைக்க முயற்சிக்கும் காங்கிரஸ்
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இங்கு கூட்டணி கட்சியாக சிவசேனா கட்சி இருந்து வருகிறது.

இதற்கிடையே, சிவசனோ தலைவர் உத்தவ் தாக்கரே தனது 58-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி தொண்டர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

உத்தவ் தாக்கரே டுவிட்டரில் இல்லாத போதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தது சிவசேனாவை 

வளைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாக்கரேயை சமரசம் செய்ய கடந்த வாரம் அமித்ஷா மும்பை சென்றார். மேலும், பாராளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சிவசேனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Sivasena #UddhavThackeray #Congress #RahulGandhi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com