என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilisai soudararajan"

    • பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

    சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டு தொடக்கம் இதனை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் 'வந்தே மாதரம்' பாடல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற் காக 7 நாட்கள் நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற உள்ளது.

    வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அதன் வீரர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சி குறைவான பதிப்புகளை வைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பதிப்புகளை தேடி தேடி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார். தமிழ்நாடு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர் கொள்ள போகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு கால மாகிய பிறகும் பெண்கள் பகல், இரவு நேரத்தில் தனிமையில் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் மாணவி யினை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத் காரம் செய்து ஆடையின்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது.

    இதற்கு பா.ஜ.க. சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் தி.மு.க. கட்சியைச் சார்ந்தவர்களும் அதன் கூட்டணியை சார்ந்த வர்களும் இதற்கு குரல் கொடுக்கவில்லை. இது போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மகாராஷ் டிரா மாநிலத்தின் நடை பெற்றிருந்தால் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் கஞ்சா விற்பவர்களும் போதை ஆசாமியும் தான் சுதந்திரமாக சுற்றித் தெரிகிறார்கள். பெண்கள் சுதந்திரமாக இல்லை. போக்சோ உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை கையாளு வதில் தமிழகம் பின்தங்கி உள்ளது. நிர்பையா நிதியை கூட சரியாகப் பயன்படுத்த வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்றார் தமிழிசை.
    • இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும்.

    எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல், மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.

    இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை.

    மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும் போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்து விடலாம்.

    இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக காப்பி அடிப்பதை நிறுத்தி ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு பெல் டைம் என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன் அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளும் இருக்கின்றன அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.
    • அஜித் குமாரின் ரேசிங் பயிற்சி வீடியோவை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் எனும் நிறுவனத்தை துவங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

    இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள போவதாக அஜித் குமார் அறிவித்து 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித் குமாருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "துணை முதலமைச்சர் உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார். ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என்பது தெரியவில்லை" என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்ப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்சு வேன் வழங்கும் நிகழ்ச்சி கல்ப்பாக்கத்தில் நடைபெற்றது.

    இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் உடனடியாக கைது செய்துள்ளனர்.

    ஆனால் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? அவர் மைலாப்பூர் பகுதி கடைகளுக்கு துணிச்சலாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று வருவது போலீசுக்கு தெரியவில்லையா?.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×