search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK rule"

    • போகலூரில் தி.மு.க. 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பரமக்குடி அருகே போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பொட்டிதட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் குணசேகரன் தலைமை தாங்கினார். பொட்டிதட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சரவணக்குமார் வரவேற்று பேசினார். அவைத்தலைவர் அப்பாஸ்கனி மற்றும் ரவிச்சந்திரன், கனகராஜ், கலைச்செல்வி, ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நெசவாளர் அணி துணைத் தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.

    உதயநிதி மன்றத்தைச் சேர்ந்த துரைமுருகன், போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் மற்றும் போகலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.கதிரவன், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தலை தூக்குகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 50-வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில்நடந் தது.

    ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்-மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:-

    தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வருகிற தேர்தலில் ''வேட்டு போடும் திருவிழாவுக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவில்லை. அதனால் உங்களுக்கு இல்லை ஒட்டு வைக்கிறோம் வேட்டு'' என்று கூற வேண்டும்.

    சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 1 கோடியே 49 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது. எளிய மக்கள் தொண்டன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வர வேண்டும். நீங்கள் நூலிழையில் தப்பித்தீர்கள். 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்கில் வெற்றி பெற்றீர்கள். அ.தி.மு.க அடுத்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதாவின் புனித அரசை அமைத்துக் காட்டும்.

    மக்கள் மன்றத்தில் நாங்கள் பேசுகிறோம். அதை சட்டமன்றத்திலும் பதிவு செய்ய வேண்டும். அதனால் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். அதைப் பற்றி உங்களோடு விவாதிக்க வேண்டும். காவல்துறையின் மானியகோரிக்கையில் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அத்தனை கொடுமைகளை பற்றி எல்லாம் எடப்பாடியார் கேள்விகள் கேட்டார். அதற்கு முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி விடுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பேரூர், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பாசறை துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

    ×