என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu schools"

    • பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்றார் தமிழிசை.
    • இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை, இதை முதலில் சரி செய்ய வேண்டும்.

    எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல், மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.

    இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை.

    மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள் தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கடந்த காலங்களில் நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் இன்றும் பயன்படும் கேலரி போன்ற வகுப்பறைகளை அமைத்து ஆசிரியருக்கு தேவையான மேடை அமைத்து தெளிவான நவீன டிஜிட்டல் கல்வி கற்பிக்கும் திரைகளையும் போர்டுகளையும் அமைப்பதன் மூலமே இதை சரி செய்து விடலாம்.

    இது போன்ற மாற்றங்களை மாணவர்களின் உளரீதியாக மனரீதியாக வகுப்பறையிலிருந்து உலக அரங்குக்கு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆக காப்பி அடிப்பதை நிறுத்தி ஆக்கபூர்வமாக கல்வித்துறையை முன்னேற்ற வேண்டும் சமீபத்தில் கூட வகுப்பறைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு பெல் டைம் என்பதை மணி அடித்து நினைவூட்டும் அரசாணை கையெழுத்திட்ட முன்னாள் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அதை நான் வரவேற்பதுடன் அதே போன்று நல்ல திட்டங்கள் புதிய கல்விக் கொள்கைகளும் இருக்கின்றன அதை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலமாகவே நம் மாணவர்களை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த முடியும் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
    • மாணவர்களுக்கு கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 'எண்ணி துணிக' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார்.

    பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், "தமிழகத்தில் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின், பெத்தபெட்டமைன் பயன்பாடு அரசுப் பள்ளிகளில் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதனால், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் குறைந்து விட்டதாகவும், கற்கும் திறன் இல்லை என்றாலும் பட்டம் வழங்கப்படுவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

    அரசு பள்ளிகளன் தரம் குறைந்து 70 சதவீத மாணவர்களால் எண்களையும், 40 சதவீத மாணவர்களால் எழுத்துகளையும் படிக்க முடியவில்லை" என்றார்.

    • 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
    • குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

    5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்தார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர், " 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது.

    தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு ப்ரோமோட் செய்யப்பட மாட்டார்கள்.

    5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

    குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்றார்.

    இதனால், தமிழகத்தில் தொடர்ந்து வரும் தேர்ச்சி முறை குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறுகையில், " தமிழகத்தில் பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை.

    5ம், 8ம் வகுப்பு தேர்ச்சி தொடர்பாக தமிழகத்தில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்.

    மாணவர்கள் மகிழ்ச்சி, பாதுகாப்போடு கல்வி கற்க உகந்த சூழல்தான் முக்கியம்.

    ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில் மத்திய அரசு பெரிய தடை கல்லை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு பொருந்தாது.

    தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகள் குறித்து குழப்பம் அடைய தேவையில்லை.

    கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் உண்மையிலேயே வருந்தத்தக்கது" என்றார்.

    ×