என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றவாளி ஞானசேகரன் விவகாரம்: அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி மனு
- ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கிடையே, குற்றவாளி ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஞானசேகரன் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என கூறப்படுகிறது.
Next Story






