என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிபி"
- வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் வெடி விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் சேதம் அடைந்தன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து டிஜிபி நலின் பிரபாத் விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர்," ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான். இதில் தேவையற்ற யூகங்களுக்கு இடமில்லை" என்றார்.
- தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றார்.
- பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:
மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், 'டி.ஜி.பி. நியமனம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி கூறிய தீர்ப்பில், டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.
யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. நியமனத்தில் ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது, இந்த மனு சற்று முன்னதாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. டி.ஜி.பி. நியமன நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததன் அடிப்படையில் மனு முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பிவைக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்தும் கடமையை செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளதால், தலைமைச் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யைநியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.
- ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது.
- போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
பாமக-வின் திலகபாமா தென்காசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விரோதமாக இருக்கின்ற.., அன்று வெள்ளைக்காரன் விரோதமாக இருந்தான். இன்று திமுக விரோதமாக இருக்கிறது. இதற்கு எதிராக இன்று ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மூலம் செய்து கொண்டிக்கிறார். அந்த வகையில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணையும் கட்டாயத்தில் இருகிக்கிறோம்.
மக்கள் விரோதம் என எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்றால், இன்று பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. குழந்தைகளை பத்திரப்படுத்த (பாதுகாக்க) முடியவில்லை. பெண்களை பத்திரப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் காவல்துறை நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது?. அவர்களுக்கு சாதகமாக யார் இருப்பார்களோ? அவரை சட்டத்தை வளைத்து கொண்டு வந்துள்ளார்கள். இது மிகவும் மோசமான முன்னுதாரணம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகமிக முக்கியம். இந்த நேரத்தில் முதலமைச்சர் இதை உடனடியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் டிஜிபி உத்தரவு குறித்து சொல்லியிருக்கிறது. அதையும் மீறி சட்டத்தை வளைத்து நியமனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு திலகபாமா கூறினார்.
- டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வெங்கட்ராமன்.
- ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
நேற்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால், சென்னை காவல் ஆணையர் அருண், வெட்கட்ராமன் பொறுப்பேற்றபோது நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை சென்னை காவல் ஆணையர் அருண் சந்தித்துள்ளார்.
சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் நேரில் சென்று அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
சங்கர் ஜிவால் விடைபெற்றதை அடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் பொறுப்பேற்றார்.
வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
- அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும்.
- பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், அரியலூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசாருக்கு தகுந்த உத்தரவை எடுக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். பின்னர், ''அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்தில்தான் மது பிரியர்கள் மது அருந்தவேண்டும். பொதுஇடங்களில் யாராவது மது அருந்தினால், அவர்கள் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், இ-மெயில், வாட்ஸ்ஆப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டி.ஜி.பி. எடுக்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு.
- ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில்," அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 கட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது" என குறிப்பிட்டுள்ளார்.
- ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.
- டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.
- சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
கன்னியாகுமரி:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்மீரா. இவர் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் கொரானா கால கட்டத்தில் தனது மகன் உவேஷ் அல்தாப் (வயது 13) மற்றும் மகளுக்கு ஆன்லைன் வகுப்பு படிக்க செல்போன் வாங்கி கொடுத்திருக்கிறார். அவர்கள், அந்த செல்போனில் யூடியூப். மூலம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவின் மோட்டிவேஷனல் பேச்சுகளை பார்த்திருக்கின்றனர்.
இதுகுறித்து உவேஷ் அல்தாப், தனது தாயாரிடம் கூறுகையில், குழந்தைகள் பப்ஜி கேம் விளையாட கூடாது. அப்படி விளையாடாமல் இருந்தால் சைக்கிள் வாங்கித்தருவேன் என்று ஒரு வீடியோவில் டி.ஜி.பி. குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளான். மேலும் டி.ஜி.பி. சைக்கிள் வாங்கி தருவார் என்று 3 வருடமாக உவேஷ்அல்தாப் காத்திருந்திருந்து உள்ளான்.
இந்த நிலையில் கடந்த வாரம் மணிமுத்தாறு ஆய்வுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்திருந்தார். அப்போது அவரை சந்தித்த உவேஷ் அல்தாப், எனக்கு எப்போது சைக்கிள் வாங்கி தருவீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் 8-ம் வகுப்பு மாணவனான உவேஷ் அல்தாப்புக்கு சென்னை பெருநகர போலீஸ் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் சைக்கிள் பரிசளித்தனர்.
- கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
- கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை தேடும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடைபெற்றது.
தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து தமிழ் நாடு முழுக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்த வகையில், கடந்த 2 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,558 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19 ஆயிரத்து 028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது."
"4 ஆயிரத்து 943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16 ஆயிரத்து 493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனமும், ஏழு இரண்டு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன."
"2023 ஆண்டு இதுவரையில் 55 ஆயிரத்து 474 சாராய வழக்குகள் பதிவு செய்யட்டு 55 ஆயிரத்து 173 குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ளனர். அதில் 4 ஆயிரத்து 534 பேர் பெண்கள். இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது.
- துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
வண்டலூர்:
தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி இன்று கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் தொடங்கியது. நாளை வரை இந்த போட்டிகள் நடை பெறுகின்றன.
இதனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதில் ரைபிள் பிரிவு, பிஸ்டல், ரிவால்வர் பிரிவு மற்றும் கார்பைன் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ரைபிள் பிரிவு போட்டி நடைபெறுகிறது. நாளை மற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். துப்பாகி சுடும் போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
- குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.
நாமக்கல்:
நாமக்கல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவர் மீது போக்சோ, வீடு புகுந்து திருட்டு, கார் திருட்டு, உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் உள்ள செல்போன் டவரில் திடீரென அவர் ஏறினார்.
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும் இதற்காக செல்போன் டவரில் ஏறியதாகவும் கூறி அவர் கூச்சலிட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த நாமக்கல் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு உற்றார், உறவினர் யாரும் கிடையாது. டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை நேரில் பார்க்க வேண்டும் அவர் மீது மிகுந்த பற்று கொண்டவன்.
2-10-2017 அன்று அவர் சேலம் மத்திய சிறைக்கு வந்தார். அப்போது நான் ஒரு கார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்தேன்.
அன்று அவர் எங்கள் முன் பேசிய வார்த்தைகளும் செயலும் என் உள்ளத்தில் அனைவரின் அன்பின் பிரதிபலிப்பை கண்டேன். குற்றம் செய்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல என்ற வரிகள் அறிந்து மனமாற்றம் அடைந்தேன்.
நான் திருந்துவதற்கு காரணம் நீங்கள் தான். மாணவர்கள் முயற்சி பண்ணுங்க என நீங்க சொன்னீங்க. இப்பொழுது என்னுடைய முயற்சி உங்களை பார்ப்பது மட்டுமே.
உங்கள் பேச்சைக் கேட்டு நான் தற்போது திருந்தி விட்டேன். நான் இதற்கு முன்பு பலமுறை தங்களை பார்க்க வேண்டும் என முயற்சி செய்தேன்.
வருடப்பிறப்பு அன்று நீங்கள் கோவிலுக்கு சென்ற போது உங்களை தூரத்திலிருந்து பார்த்தேன்.ஆனாலும் தொடர்ந்து உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் தான் தொடர்ந்து முயற்சியை கொண்டுள்ளேன்.
இந்த கடிதத்தை யார் பார்த்தாலும் அவரிடம் தெரியப்படுத்துங்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழக டி.ஜி.பி.-ஐ பார்க்க வேண்டும் என பிரபல கொள்ளையன் செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்ததால் நமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.






