என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranya Rao"

    • நடிகை ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்திருந்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ரன்யா ராவ் தனது வளர்ப்பு தந்தையான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் அதிகாரத்தை பயன்படுத்தி தங்க கடத்தலில் ஈடுபட்டார்.

    விமான நிலையத்திற்கு வந்திறங்கும் ரன்யா ராவை போலீஸ் வாகனத்தில் போலீசார் அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் வைத்து ரன்யா ராவை அதிகாரிகள் சோதனை கூட நடத்தாமல் அனுப்பி வைத்திருந்தனர். இதற்கிடையில், கைதான ரன்யா ராவ் மீது காபி போசோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், ஓராண்டுக்கு சிறையில் இருந்து அவர் வெளியே வர முடியாத நிலையில் கம்பி எண்ணி வருகிறார்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ் கைதாகி 8 மாதங்கள் ஆவதால், அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகள் தயாராகி வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக ரூ.123 கோடிக்கு ரன்யா ராவ் தங்கம் கடத்தி இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், அதுதொடர்பான ஆவணங்களை குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள் சேர்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் குற்றப்பத்திரிகையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திர ராவ், போலீஸ் வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, இந்த தங்கம் கடத்தலில் தொடர்புடைய நகைக்கடை அதிபர்கள் உள்பட 4 பேர் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அடுத்த வாரம் ரன்யா ராவ் உள்ளிட்டோர் மீது அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் சிக்கினார்.
    • தற்போது அவரை சிறையில் உள்ள நிலையில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தபோது பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டார்.

    இவர் இதுபோன்று பலமுறை தங்கம் கடத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இவருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ரேங்கில் இருந்தவர். இவரை பெயரை பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கே. ராமச்சந்திர ராவ் என்ற அவரது தந்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிழலையில் வருவாய் புலனாய்வுத்துறை ரன்யா ராவ்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதம் செலுத்தாவிட்டாலர், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ரன்யா ராவ் உடன், மேலும் 3 பேருக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    இந்த வழக்கில் கைதாகி ரன்யா ராவ் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
    • ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
    • அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    • ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார்.
    • ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் மற்றும் இணைக் குற்றவாளியான தருண் கொண்டராஜுஆகியோருக்கு ரூ.2 லட்சம் பிணையுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.

    விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) இன் கீழ் பதியப்பட்ட வழக்கால் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயில் இருந்து 14.2 கிலோகிராம் வெளிநாட்டு தங்கத்தை கொண்டு வந்ததாக மார்ச் 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரன்யா ராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன்.
    • தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன். இன்று விவாகரத்து கோரும் முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

    தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் நடிகை ரன்யா ராவுடன் துபாய்க்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், அங்கிருந்து அவர் தங்கம் கடத்தியதாகவும் போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குறிப்பாக சாகில் ஜெயினிடம் விசாரணை நடத்திவிட்டு நேற்று முன்தினம் தான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்திருந்தது. மேலும் இந்த வழக்கில் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் கோர்ட்டுக்கு அளித்துள்ள ஆதாரங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களும் தற்போது வெளியே வந்துள்ளது.

    அதன்படி, துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வரும் தங்கத்தை நகைக்கடை அதிபரான சாகில் ஜெயின் தான் விற்பனை செய்து வந்துள்ளார். இவ்வாறு தங்கத்தை விற்று கிடைக்கும் பணத்தை ஹவாலாவாக துபாய்க்கு அவர் அனுப்பி மாற்றியது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை துபாயில் இருந்து 49 கிலோ 600 கிராம் தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்துள்ளார். அதனை விற்பனை செய்ய சாகில் ஜெயினிடம் அவர் கொடுத்துள்ளார்.

    மேலும் இந்த 5 மாதத்தில் துபாயில் தங்கம் வாங்குவதற்காக ரூ.30 கோடி ஹவாலா பணம் மாற்றப்பட்டு இருப்பதாகவும் சாகில் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதனால் தங்கம் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
    • அவரது தந்தை போலீசார் அதிகாரி என்பதால் பாதுகாப்பு விதிமுறையை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்.

    கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள்.

    கைது செய்யப்பட்ட அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஜாமின் கேட்டு ரன்யா ராவ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

    • ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவை கடந்த 3-ந்தேதி டெல்லியை சேர்ந்த வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கம் கடத்தலில் நடிகையின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைதாகி உள்ளார்.

    இந்த வழக்கில் போலீசார் விசாரணை அறிக்கையை தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது நடிகை ரன்யா ராவ் மற்றும் தருண் ராஜு ஆகியோர் அமெரிக்கா பாஸ்போர்ட்டை வைத்து தங்கம் கடத்தியதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் தருண் ராஜு தான் மட்டும் 6 கிலோ தங்கம் கடத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், ரன்யா ராவ் மூலம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய்க்கு தங்கம் கடத்தி வந்துள்ளார்.

    அதாவது ரன்யா ராவுக்கு சொந்தமான நகைக்கடை துபாயில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவின் உள்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று துபாய் நகைக்கடைக்கு தங்கத்தை கொண்டு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தருண் ராஜுவின் பாஸ்போர்ட்டில் ஜெனீவா செல்வதாக கூறி, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு நடிகை ரன்யா ராவ் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ந்தேதி இரவு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீது நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விசாரணையை டி.ஆர்.ஐ., சி.பி.ஐ., மாநில காவல் துறை ஆகியவை தீவிரப்படுத்தி உள்ளது.

    நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான தருண்ராஜு கடந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் விசாரிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    டி.ஆர்.ஐ. சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் மது என். 2023 மற்றும் 2025-க்கு இடையில் ரன்யா தருணுடன் 26 முறை துபாய் பயணம் செய்தார். மார்ச் 3-ந்தேதி ரன்யாவுடன் தருண் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினர். பின்னர் தங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பும்போது ரன்யாவிடம் கொடுத்து விட்டு தருண் ஹைதராபாத் சென்று விட்டார். தருண் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளவர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    இதையடுத்து தருண் ராஜூவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    • துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
    • கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார்.

    கன்னட நடிகையான ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அதே நேரத்தில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த கோணத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதாவது துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.

    இவ்வாறு தங்கம் வாங்கிய போது, ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் ரூ.1.70 கோடியை பெற்று விட்டு, தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்திருந்தார். இந்த ரூ.1.70 கோடியை ஹவாலா மூலமாக துபாய்க்கு ரன்யா ராவ் கொண்டு சென்றிருந்ததாக நடிகர் தருண் ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டும் இன்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.

    அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்கு வந்திருப்பதும், அது உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ. மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதையடுத்து, ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

    இதனால் கூடிய விரைவில் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    ×