என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold Smuggling case"

    • திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன்.
    • தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் ரன்யா ராவ், அவரது நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு, பல்லாரியை சேர்ந்த நகைக்கடை அதிபர் சாகில் ஜெயின் ஆகிய 3 பேரும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக நடிகை ரன்யா ராவின் கணவர் ஜதின் ஹுக்கேரி கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, நான் வலியையும் துயரத்தையும் தாங்கி வருகிறேன். இன்று விவாகரத்து கோரும் முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

    தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்யா ராவின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் நடிகை ரன்யா ராவுடன் துபாய்க்கு அடிக்கடி பயணம் செய்ததாகவும், அங்கிருந்து அவர் தங்கம் கடத்தியதாகவும் போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
    • அவரது தந்தை போலீசார் அதிகாரி என்பதால் பாதுகாப்பு விதிமுறையை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்.

    கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள்.

    கைது செய்யப்பட்ட அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஜாமின் கேட்டு ரன்யா ராவ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

    • ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ந்தேதி இரவு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீது நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விசாரணையை டி.ஆர்.ஐ., சி.பி.ஐ., மாநில காவல் துறை ஆகியவை தீவிரப்படுத்தி உள்ளது.

    நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான தருண்ராஜு கடந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் விசாரிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    டி.ஆர்.ஐ. சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் மது என். 2023 மற்றும் 2025-க்கு இடையில் ரன்யா தருணுடன் 26 முறை துபாய் பயணம் செய்தார். மார்ச் 3-ந்தேதி ரன்யாவுடன் தருண் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினர். பின்னர் தங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பும்போது ரன்யாவிடம் கொடுத்து விட்டு தருண் ஹைதராபாத் சென்று விட்டார். தருண் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளவர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.

    இதையடுத்து தருண் ராஜூவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    • அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள்.
    • தங்கம் கடத்தி வந்த போது, ரன்யா ராவை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார்.

    பெங்களூரு:

    கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3-ந்தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின்பேரில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டார்.

    அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று காலையில் பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே தங்கம் கடத்தலில் ரன்யா ராவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, அவர் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 12-ந்தேதியே முடிந்திருந்தது. அன்றைய தினம் ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை 14-ந்தேதி (அதாவது நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, அந்த மனு மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி கூறினார்.

    அப்போது ரன்யா ராவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். ரன்யா ராவ் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதால், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள். சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருந்தாலும், தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள், தங்கத்தை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு போலீசார் விதிமுறைகளை மீறி இருந்தது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், டி.ஜி.பி.யுமான ராமசந்திரா ராவ் உத்தரவின்பேரில், தங்கம் கடத்தி வந்த போது, அவரை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார். அதுபற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா, டி.ஐ.ஜி. வம்சி கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் சென்றார். 2-வது முனையத்தில் ரன்யா ராவ் எந்த வழியாக தங்கம் கடத்தி வந்தார்?, அவரை போலீஸ்காரர் பசவராஜ் எப்படி அழைத்து வந்தார்?, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ரன்யா ராவை அழைத்து வருவதற்கு அவர் கூறிய காரணம் என்ன? உள்ளிட்டவை குறித்து கவுரவ் குப்தா அதிகாரிகளிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டார்.

    அதே நேரத்தில் கடந்த 3-ந்தேதி தங்கம் கடத்தி வந்தபோது, விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா பெற்றுள்ளார். விசாரணையை முடித்துவிட்டு அவர் தலைமையிலான அதிகாரிகள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.

    • நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
    • என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.

    என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.

    தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.

    ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

    இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது.
    • பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் இந்த வழக்கில் கைதானார்.

    இதையடுத்து இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அவர் பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தினர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா அவ்வப்போது ஊடகங்கள் முன்பு பரபரப்பு தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும் இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதன்பின்னணியில் அரசியல் இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறிவந்த நிலையில் நேற்று ஸ்வப்னா முகநூலில் தோன்றி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். அவரை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தங்க கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் தந்து விடும்படி கேட்டார்.

    அவற்றை கொடுத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாகவும் கூறினார். பெங்களூருவில் இருந்து அரியானாவுக்கோ அல்லது ஜெய்பூருக்கோ சென்றுவிட வேண்டும்.

    மேலும் கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது. மீறி பேசினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    மேலும் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற ரன்யா ராவ் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
    • தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு:

    துபாயில் இருந்து விமானத்தில் 14 கிலோ 800 கிராம் தங்ககட்டிகளை தனது தொடை பகுதியில் கட்டிவைத்து கடத்தி வந்த கன்னடம், தமிழ் திரைப்பட நடிகையான ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 3-ந்தேதி அதிரடியாக கைது செய்தனர். இவர் ஐ.பி.எஸ்.அதிகாரியும், கர்நாடக வீட்டு வசதித்துறை இயக்குனருமான டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். மேலும் ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.4¾ கோடி தங்க நகைகள், ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    கைதான நடிகை ரன்யா ராவ் விசாரணைக்கு பிறகு 14 நாள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

    அதாவது நடிகை ரன்யா ராவ் துபாய், அமெரிக்காவுக்கு பயணம் செய்தது குறித்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு(2024) டிசம்பர் மாதம் 24-ந் தேதி துபாய் சென்ற அவர் அங்கு 3 நாட்கள் தங்கி இருந்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அமெரிக்கா சென்ற ரன்யா ராவ் அங்கு 7 நாட்கள் தங்கி இருந்துள்ளார். அதேபோல கடந்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 5 முறை அவர் துபாய்க்கு சென்று வந்ததும் தெரியவந்தது. அவர் தங்கம் கடத்தலுக்காக தான் அமெரிக்காவுக்கும் சென்றாரா? எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலை வைத்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ. தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, பெங்களூருவிலும் உடனடியாக விசாரணையை தொடங்கிவிட்டனர். அவர்கள் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி, மும்பையை சேர்ந்த கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வருவாய் நுண்ணறிவு பிரிவு விசாரணை முடிந்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரன்யா ராவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நாளை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    • கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பெங்களூரு:

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடை த்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.

    நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரன்யாவும், தருணும் பல வருட நண்பர்கள் ஆவார்கள். அவர் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

    அதுபோல் ஒரு அரசியல் பிரமுகரின் கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்களில் மட்டும் கூட்டுறவு வங்கியிலிருந்து ரன்யாவின் கணக்கிற்கு ரூ.10 லட்சம் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வருவதற்கு முன்பு ரன்யாவின் கணக்கில் பணம் இல்லை. இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்படும் செல்வாக்குமிக்க 2 அமைச்சர்கள் யார்? என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு உள்துறை மந்திரி பரமேஸ்வரா இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை சி.பி.ஐ. விசாரித்து கண்டுபிடிக்கும் என தெரிவித்தார்.

    • 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது நடிகை பிடிபட்டார்.
    • விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.

    பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நடிகையின் தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இந்த நிலையில் நெறிமுறைகளை பயன்படுத்தியது தொடர்பான உண்மையை கண்டறிய ராமச்சந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.

    தனது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தி வந்ததில் இவருக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இவரது பெயர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த உண்மையை கண்டறிய கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா விசாணை நடத்துவார். ராமச்சந்திரா ராவிடம் விசாணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.

    மேலும் விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் வழங்குமாறு டிஜிபி, ஐஜி, செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரும்போது ரன்யா ராவ் பிடிப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஸ்வப்னா சுரேசிடம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை.
    • உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிப்பதால் என்னை கேரள முதலமைச்சர் துன்புறுத்துகிறார்.

    தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் கேரள குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    என் மீது பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடிப்படையில், அது துன்புறுத்தலாக இருந்தது. எனது வழக்கறிஞர் கிருஷ்ணராஜை வழக்கை விட்டு விலகும்படி வலியுறுத்தினர். விசாரணை என்ற பெயரில் முதலமைச்சர் பினராயி விஜயன் என்னை சாப்பிட கூட விடாமல் துன்புறுத்துகிறார்.

    பொதுமக்களை காக்க வேண்டிய கேரள முதல்வர், தற்போது என்னை பட்டினி கிடக்க வைத்துள்ளார். நான் உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிப்பதால் அவர் என்னை துன்புறுத்துகிறார். அவரது மகளுக்கு எதுவும் அவரால் செய்யமுடியல்லை. நம் அனைவரையும் அவர் தமது மகளாக கருத வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார் கூறினார். இதனை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்.

    ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் பினராய் விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். நேற்று பினராய் விஜயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சியினர் திரண்டதால் பதட்டம் காணப்பட்டது.

    வடகரையில் பினராய் விஜயன் கான்வாய் முன்பு கறுப்புக்கொடி காட்டியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து அவர் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டார்.

    ×