என் மலர்
நீங்கள் தேடியது "கேரளா போராட்டம்"
- பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார் கூறினார். இதனை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்.
ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பினராய் விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். நேற்று பினராய் விஜயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சியினர் திரண்டதால் பதட்டம் காணப்பட்டது.
வடகரையில் பினராய் விஜயன் கான்வாய் முன்பு கறுப்புக்கொடி காட்டியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகு, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களின் கடும் எதிர்ப்பால், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த போராட்டம், வன்முறை தொடர்பாக ஏற்கனவே 440 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 210 பேருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிட்டனர். 210 பேரின் புகைப்படங்களையும் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
அந்த படங்களை எல்லா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட பக்தர்களை அடையாளம் கண்டறிந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டனர்.
அதன்படி, 210 பக்தர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் எர்ணாகுளம் மாவட்டத்தில் 71 பேர், கோழிக்கோடு மாவட்டத்தில் 40 பேர், பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் தலா 30 பேர் ஆகியோர் அடங்குவர்.
இதுபோல், மாதாந்திர பூஜைக்காக கோவில் நடை திறந்து இருந்தபோது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

போலீசாரின் இந்த செயலுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களால் நடத்தப்படும் இந்த அரசு, ஐயப்பன் கோவிலின் புனிதத்தை கெடுக்க பார்க்கிறது. இவ்வளவு பேரை மொத்தமாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உலகின் 2-வது மிகப்பெரிய ஆன்மிக தலத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. கோவிலை காக்க மாபெரும் இயக்கத்தை தொடங்குவோம்.
மாநிலம் முழுவதும் 26-ந் தேதி (இன்று) கண்டன பேரணி நடத்தப்படும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கும் போராட்டத்தை விரிவுபடுத்துவோம். கோர்ட்டையும் அணுகுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்களை தடுத்த பக்தர்கள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டபோது, பக்தர்களுக்கு இடையே இப்ராகிம் குட்டி என்ற போலீஸ் டிரைவர் சாதாரண சீருடையில் நிற்கும் புகைப்படமும் இருந்தது.
இதன்மூலம், பக்தர்கள் போர்வையில் போலீசாரே வன்முறையை தூண்டி விட்டதாக பா.ஜனதா பொதுச்செயலாளர் ரமேஷும், பக்தர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த புகைப்படத்தை மட்டும் போலீசார் வாபஸ் பெற்றனர்.
இதற்கிடையே, மண்டல-மகரவிளக்கு சீசனுக்காக நவம்பர் 17-ந் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. 3 மாத காலம் நடை திறந்து இருக்கும். அப்போது, போராட்டத்தை ஒடுக்க 5 ஆயிரம் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட உள்ளனர். அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன. #SabarimalaTemple #BJP






