search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gold smuggling"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தல் கும்பல் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் ஊழியர்கள் சிலரது உதவியுடன் தங்கத்தை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு செல்வது தெரிந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் இருந்து சென்னை விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது விமான நிலையத்தில் ஓப்பந்த ஊழியர்களாக வேலை பார்த்து வரும் பல்லாவரம், குரோம்பேட்டையை சேர்ந்த சினேகா, சங்கீதா ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பணிமுடிந்து வீட்டுக்கு சென்ற பெண் ஊழியர்களை பின் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்றனர். அவர்கள் பெண் ஊழியர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சினேகா, சங்கீதா ஆகியோரது வீடுகளில் கழிவறை மற்றும், பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்கப் பசைகளை கைப்பற்றினர். மொத்தம் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

    விசாரணையில் அவர்கள், விமானங்களில் தங்கம் கடத்தி வரும் கும்பலிடம் தங்கத்தை ரகசியமாக வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்க அதிகாரிகளின் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்து உள்ளனர். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகள் பெண் ஊழியர்களின் வீட்டுக்கு வந்து கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்வது விசாரணையில் தெரியவந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் படி நேற்று அதிகாலை மண்ணடியில் தங்கம் கடத்தலில் குருவியாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹர்ஷத் என்பவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்திய போது 1½ கிலோ தங்கம், ரூ. 45 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் என்வரது வீட்டில் தங்கியிருந்தது தெரிந்தது. மேலும் கலையரசன் தங்கம் கடத்தும் ஆசாமிகளை பெண் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பெண் ஊழியர்கள் உட்பட 4 பேரையும் மத்திய வருவாய் புலானய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கே.கே.நகர்:

    வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த சுங்கத்துறை டிரைவர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சுமார் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தங்கம் கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புருனே நாட்டில் பணியாற்றி வந்த மீமிசல் பகுதியைச் சேர்ந்த முஸ்தமி (வயது22), அதே பகுதியைச் அசாருதீன்( 24) ஆகிய 2 பேர் மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்தனர்.

    அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் . அப்போது அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்துச்சென்று சோதனை செய்தார்கள்.

    அப்போது முஸ்தமி 672 கிராம் தங்கமும், அசாருதீன் 681 கிராம் தங்கமும் தனது உடலில் உருளை வடிவில் பேஸ்ட் ஆக மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.84.02 லட்சம் ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
    • விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
    • தங்கம் கடத்தியது தொடர்பாக இந்திய பயணி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுடெல்லி :

    தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 4 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை பரிசோதனை செய்ததில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாகும். இது தொடர்பாக பாங்காங்கில் இருந்து திரும்பிய இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
    • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    • ஒட்டுமொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் மாலத்தீவில் இருந்து வந்த ஒரு விமானத்தின் கழிவறையில் தங்கம் கிடப்பதை ஊழியர்கள் பார்த்தனர்.

    இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று கழிவறையில் கிடந்த தங்கத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஒட்டு மொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர்.

    அவற்றின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்து கழிவறையிலேயே மர்மநபர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாகவும், விமானம் மூலமாகவும் தங்கத்தை மறைத்து கடத்தி எடுத்து வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரையில் சுமார் 100 கிலோ அளவுக்கு கடத்தல் தங்கம் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் மற்றும் ரூ.2லட்சத்து 30 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செயப்பட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுகார்பேட்டை பகுதியில் நகை பட்டறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் பிடிபட்டன.

    திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 7½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி அன்று சென்னை விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் மலேசிய பயணிகளிடம் இருந்து 3 கிலோ தங்கம் பிடிப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.73 கோடியாகும்.

    இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் 315 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

    இதன்படி இந்த ஆண்டு இதுவரையில் 100 கிலோ சென்னையில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.

    அதில் 1.4 கிலோ எடையுள்ள கால் கொலுசுகள், செயின்கள், மோதிரம், வளையல் உள்ளிட்ட வெளிநாட்டு தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் விஜயவாடா வருவதற்கு முன்பு கோவாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததக தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.
    • பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு இண்டிகோ, மலிந்தோ, ஸ்ரீலங்கன், ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் விமான சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறையினர் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது.

    நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி(வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.08 கோடி மதிப்பிலான 1.872 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்து வந்த, புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன்(வயது 37) என்பவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களில் மட்டும், திருச்சி விமான நிலையத்தில் 2.15 கிலோ கடத்தல் தங்கம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு, இந்திய ரூபாயில் 1.69 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo