என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கக் கடத்தல் வழக்கு"

    • 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
    • ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
    • அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் கைப்பற்றப்பட்டன.

    நடிகை ரன்யா ராவ் மீதான தங்கம் கடத்தல் வழக்கு குறித்து டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

    தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    • ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார்.
    • ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரன்யா ராவ் மற்றும் இணைக் குற்றவாளியான தருண் கொண்டராஜுஆகியோருக்கு ரூ.2 லட்சம் பிணையுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியுள்ளது.

    விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது என இருவருக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    ரன்யா ராவ் ஜாமின் பெற்றபோதிலும் அவர் விடுவிக்கப்பட மாட்டார். அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) இன் கீழ் பதியப்பட்ட வழக்கால் அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. ரன்யா மீதான COFEPOSA வழக்கை எதிர்த்து அவரது தாய் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக துபாயில் இருந்து 14.2 கிலோகிராம் வெளிநாட்டு தங்கத்தை கொண்டு வந்ததாக மார்ச் 3 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ரன்யா ராவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.
    • வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன்.

    தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ரன்யா ராவ், டிஆர்ஐயின் கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு (ஏடிஜிக்கு) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்த வழக்கில் நான் நிரபராதி என்று சொல்ல உங்கள் அதிகாரிகள் என்னை அனுமதிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்டதிலிருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை 10 முதல் 15 முறை தன்னை அதிகாரிகள் அறைந்ததார்கள்.

     ஏற்கனவே எழுதப்பட்ட எழுதப்பட்ட  50 முதல் 60  பக்கங்களிலும், சுமார் 40 வெற்றுப் பக்கங்களிலும் கையெழுத்திட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டேன். திரும்பத் திரும்ப அடித்து, அறைந்த போதிலும், அவர்கள் (டிஆர்ஐ அதிகாரிகள்) தயாரித்த அறிக்கையில் கையெழுத்திட நான் மறுத்துவிட்டேன். காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில், நான் தூங்கவோ சாப்பிடவோ அனுமதிக்கப்படவில்லை.

    இது தவிர, எனது தந்தையின் அடையாளத்தை வெளியிடுவதாகவும் ஒரு அதிகாரி என்னை மிரட்டினார். இந்த வழக்குக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடமிருந்து எந்த தங்கமும் மீட்கப்படவில்லை.

    டெல்லியைச் சேர்ந்த சிலர் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரன்யா ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

    ஆனால், கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ரன்யா ராவிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.

    • தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா.
    • கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

    தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா. இதில் கதாநாயகியாக கன்னட நடிகை ரன்யா ராவ் (31) நடித்திருந்தார். இவர் தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய அவர் உடலில் அதிகபடியான நகைகளை அணித்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது. கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

    இதனை கண்காணித்த அதிகாரிகள் இந்த முறை அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்தில் காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்து நகைகளை கைப்பற்றினர்.

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்கக்கட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கடத்தலின் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரியான ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என ஸ்வப்னா சுரேஷ் கூறினார்.
    • ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்பட பலர் சிக்கினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மீது என்.ஐ.ஏ. போலீசார் உபா சட்டத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    ஸ்வப்னா சுரேஷ் கேரள முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். இந்தக் கடத்தலில் முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் இன்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.

    ×