2 ஆண்டுகளில் சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூ.800 கோடி தங்கம் கடத்தல்

சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 ஆண்டுகளில் சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூ.800 கோடி தங்கம் கடத்தல்
Published on

புதுடெல்லி:

கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து அசல் எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்கு 1,064 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.800 கோடி ஆகும். இதுதொடர்பாக 'காபிபோசா' சட்டத்தின்கீழ் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 10 பேரை கைது செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com