என் மலர்
இந்தியா

2 ஆண்டுகளில் சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு ரூ.800 கோடி தங்கம் கடத்தல்
- சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தங்கம் கடத்தல் தொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் சீனாவில் இருந்து கடத்திவரப்பட்ட 108 கிலோ தங்கக்கட்டிகளை இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உள்ளூரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் சீனாவில் இருந்து அசல் எல்லைக்கோடு வழியாக இந்தியாவுக்கு 1,064 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.800 கோடி ஆகும். இதுதொடர்பாக 'காபிபோசா' சட்டத்தின்கீழ் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 10 பேரை கைது செய்துள்ளது.
Next Story






