search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பேனருக்கு பூட்டுபோட்டுள்ள பா.ஜனதா அமைச்சர்- சமூக வலைதளத்தில் வீடியோ பரவல்

    • புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.
    • ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    வீட்டை பாதுகாக்க கதவுக்கு பூட்டுபோட்டு செல்வது வழக்கம். ஆனால் புதுவையில் பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதை தடுப்பதற்காக பா.ஜனதா அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ளார். இது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.

    புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பா.ஜனதா அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

    ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

    புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.

    இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார்.

    இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    Next Story
    ×