என் மலர்
நீங்கள் தேடியது "Atishi"
- சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.
- தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என கேட்டார்.
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு ஜூலை 1 முதல் தடை விதித்தது.
இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கோபத்திற்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.
இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
- இரு சக்கர வாகனங்களை பெரிதும் நம்பியுள்ள தொழிலாள வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும்.
டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நன்கொடையாக எத்தனை லட்சம் ரூபாய் பெற்றார்கள் என்பதை வெளிப்படுத்துமாறு பாஜகவை டெல்லி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுள்ளார். பணம் வாங்கியதே வாகனத் தடைக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் என்று அதிஷி குற்றம் சாட்டினார்.
பாஜகவின் துக்ளக் சீர்திருத்தங்கள் மூலம் ஒரே இரவில் 62 லட்சம் வாகனங்கள் சாலைகளில் இருந்து மறைந்துவிடும் என்றும் அதிஷி கூறினார். இவற்றில் 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 20 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகும்.
தற்போதைய தடை, இரு சக்கர வாகனங்களை பெரிதும் நம்பியுள்ள தொழிலாள வர்க்கத்தை கடுமையாக பாதிக்கும். இந்த 40 லட்சம் பேர் எப்படி வேலைக்குச் செல்வார்கள்? அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று அதிஷி வினவியுள்ளார்.
"ஒரு வாகனத்தின் வயதுக்கும் மாசுபாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. நன்கு பராமரிக்கப்படும் வாகனங்கள் பழையதாக இருந்தாலும் மாசுபாட்டை ஏற்படுத்தாது. ஒரு வாகனம் பழையது என்பதற்காக அது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தமல்ல.
சில கார்கள் 7 ஆண்டுகளில் 3 லட்சம் கி.மீ. பயணிக்க முடியும். 15 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், அது 50,000 கி.மீ. மட்டுமே பயணித்திருக்கலாம். இது கொடூரமானது இல்லையா?" என்று அதிஷி கேட்டுள்ளார்.
பாஜக தலைவர்களால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்பதை சிறு குழந்தைகள் கூட 5 மாதங்களுக்குள் புரிந்துகொள்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
- ரேகா குப்தா, "எந்த குடிசையையும் இடிக்க மாட்டோம்" என்று கூறியதற்கு முரண்பாடாக இருப்பதாக அதிஷி தெரிவித்துள்ளார்.
- முன்னதாக தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மாதராசி முகாம் இவ்வாறு இடிக்கப்பட்டது
டெல்லி முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி, புலம்பெயர்ந்தோர் வசிக்கும் குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதால் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதிஷியின் கல்காஜி தொகுதியில் உள்ள பூமிஹீன் முகாம் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) இடிக்கப்படுவதை எதிர்த்து அவர் போராட்டம் நடத்தியபோது அவர் கைதானார்.
டிடிஏ ஏற்கனவே அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, இடிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
அதிஷி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் படையினர் குவிக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்திருந்தார். "பாஜக பூமிஹீன் முகாமை இடித்து தரைமட்டமாக்கப் போகிறது. இன்று குடிசைவாசிகள் போராட்டம் நடத்தப் போகிறார்கள். எனவே பாஜக அரசு ஆயிரக்கணக்கான போலீசாரையும் சிஆர்பிஎஃப் படையினரையும் அனுப்பியுள்ளது" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "எந்த குடிசையையும் இடிக்க மாட்டோம்" என்று கூறியதற்கு முரண்பாடாக இருப்பதாக அதிஷி தெரிவித்துள்ளார்.
இது ஒரு வருடத்தில் மூன்றாவது இடிப்பு என்று அதிஷி தெரிவித்தார். பாஜக அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் பலர் வேலை இழந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஆதரவாக தான் போராடுவதாகவும் அவர் கூறினார். மக்கள் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் அதிஷி எச்சரித்தார்.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் புறக்கணிக்க முடியாது என்று ரேகா குப்தா கூறினார். முன்னதாக தமிழர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மாதராசி முகாம் இவ்வாறு இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை பூமிஹீன் (நிலமற்றவர்களின்) முகாம் இடிப்பு பணிகள் தொடங்க உள்ளது.
- வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
- இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"
உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.
இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லி மாநில மந்திரி அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார்.
- அவர் தெரிவித்த மறுநாள் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் சுமார் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பணமோசடி தொடர்பான வழக்கு தொடர்பான சோதனையா அல்லது புதிய வழக்கு தொடர்பான சோதனையா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.
கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார், டெல்லி ஜல் போர்டு முன்னாள் உறுப்பினர் ஷலாப் குமார், மாநிலங்களை எம்.பி. அலுவலகம், தேசிய பொருளாளர் என்.டி. குப்தா ஆகியோர் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
#WATCH | ED raid underway at the residence of AAP MP ND Gupta in Delhi. As per sources, ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal's personal secretary among others connected to the Aam Aadmi Party as part of its money… pic.twitter.com/dRdlSJjE6s
— ANI (@ANI) February 6, 2024
டெல்லி மாநில மந்திர அதிஷி, எஜென்சியின் அம்பலத்தை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக டெல்லி மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.
- இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் ஜாமின் கிடைக்காமல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்மேல் சம்மனாக கொடுத்து வருகிறது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் இன்று ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய பலரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக டெல்லி மந்திரி அதிஷி கூறியதாவது:-
கடந்த இரண்டு வருடங்களாக ஆம் ஆத்மி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். மதுபான ஊழல் என்ற பெயரில் இது நடந்து வருகிறது. சிலரின் வீடுகளில் சோதனை செய்யப்படுகிறது. சிலருக்கு சம்மன் கொடுக்கப்படுகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டும்கூட, அமலாக்கத்துறையால் ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப முடியவில்லை.
இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, உறுதியான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிமன்றமும் ஆதாரங்களை வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆம் ஆத்மி தலைவர்கள், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி பொருளாளர், எம்.பி. குப்தா, கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் மற்றும் பலருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சாட்சிகளின் வாக்குமூலம் அடங்கிய ஆடியோ அழிக்கப்பட்டுள்ளது. அதை நாட்டு மக்களுக்கு முன் கொண்டு வாரங்கள் பார்ப்போம். ஆம் ஆத்மி கட்ச தலைவர்கள் குரலை ஒடுக்கவதற்காக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு எதிராக போலி அறிக்கைகள் வழங்குமாறும் அமலாக்கத்துறை கட்டாயப்படுத்துகிறது. மிரட்டுகிறது.
#WATCH | ED raid underway at the residence of Delhi CM Arvind Kejriwal's personal secretary Bibhav Kumar in Delhi.As per sources, ED is conducting searches at nearly 10 locations including the residence of Delhi CM Arvind Kejriwal's personal secretary among others connected to… pic.twitter.com/T3rMchov5G
— ANI (@ANI) February 6, 2024
மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் பயப்படமாட்டோம் என்பதை அவருக்கு சொல்ல விரும்புகிறேன்" என்றார்.
அதிஷி, அமலாக்கத்துறையின் அம்பலத்தை நாளை (இன்று) 10 மணிக்கு வெளிப்படுத்த இருக்கிறேன் எனக் குறிப்பிடடிநர்தார். அவருடைய மந்திரி சபையில் இருக்கும் சவுரப் பரத்வாஜ், பா.ஜனதாவின் பணம் சுரண்டும் துறையின் மிகப்பெரிய அம்பலம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் இன்று காலை அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
- டெல்லியில் 2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.
- டெல்லி மாநில அரசின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது.
டெல்லி மாநில சட்டமன்றத்தில் அம்மாநிலத்தின் நிதி மந்திரி அதிஷி பொருளாதார ஆய்வு அறிக்கையை (2023-24) தாக்கல் செய்தார். அப்போது, 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற 4-ந்தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
பொருளாதார ஆய்வு அறிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-
டெல்லி மாநிலத்தின் வருவாய் உபரி 2022-23-ல் 14,457 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் வருவாய் உபரி 3,270 கோடி ரூபாயாக இருந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு மட்டும்தான் நாட்டில் வருவாய் உபரி அரசாக திகழ்கிறது.
டெல்லி மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை 2022-2023-ல் 1.9 சவீதமாக குறைந்துள்ளது. 2020-21-ல் (கொரோனாவிற்குப் பிறகு) 6.3 சதவீதமாக இருந்தது.
டெல்லியின் பணவீக்கம் 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.81 சதவீதமாக உள்ளது. அதே காலக்கட்டத்தின் நாட்டின் பணவீக்கம் 5.65 சதவீதமாக இருந்தது.
2023-24-ல் தனிநபர் வருமானம் 4 லட்சத்து 61 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 2021-22-ல் 3 லட்சத்து 76 ஆயிரத்து 217 ஆக இருந்தது. இரண்டு வருடத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போதைய பண மதிப்பில் 2023-24-ல் 11 லட்சத்து 7 ஆயிருத்து 746 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தை காட்டிலும் 9.17 சதவீதம் உயர்வு ஆகும்.
- அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- இன்னும் இரண்டு மாதங்களில் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் மந்திரியுமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:-
எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன்.
மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.
- பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
- கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.
கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.
சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.
இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.
- தலைநகர் டெல்லியில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது.
- குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி பிரதமருக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் 28 லட்சம் பேர் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு நாளுக்குள் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அரியானா அரசு தங்களது பங்கு குடிநீரை திறந்து விடவில்லை. மக்கள் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, குடிநீர் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றனர்.
தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். தண்ணீர் திறக்கக்கோரி அரியானா அரசுக்கு பல கடிதங்கள் எழுதியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- நான் இன்று முதல் "பானி சத்தியாகிரகத்தை" தொடங்குகிறேன்.
- டெல்லி மக்களுக்கு அரியானாவில் இருந்து உரிமையான தண்ணீரை பெறும் வரை போராட்டத்தை தொடருவேன்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
டெல்லி மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி, குடிநீர் பிரச்சனையை பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும். ஜூன் 21-ம் தேதிக்குள் உரிய குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் போகல் பகுதியில் டெல்லி மந்திரி அதிஷி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
முன்னதாக ராஜ்காட் பகுதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில்,
நான் இன்று முதல் "பானி சத்தியாகிரகத்தை" தொடங்குகிறேன். டெல்லி மக்களுக்கு அரியானாவில் இருந்து உரிமையான தண்ணீரை பெறும் வரை போராட்டத்தை தொடருவேன் என்று கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக அரியானா மாநிலம் தனது பங்கான 613 எம்ஜிடிக்கு பதிலாக ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீர் கொடுத்துள்ளது. இதன் விளைவாக டெல்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் வரலாறு காணாத வெப்பம் நிலவுகிறது. இதன் விளைவாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi: Sunita Kejriwal, Delhi Ministers Atishi and Saurabh Bharadwaj and AAP MP Sanjay Singh leave after visiting Rajghat.Delhi Water Minister Atishi will begin an indefinite hunger strike from today over the water crisis in the national capital. AAP alleges that… pic.twitter.com/KWy8X0awXN
— ANI (@ANI) June 21, 2024
- அரியானா அரசு குறைவாக தண்ணீர் வழங்குவதால் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை.
- மக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் அரியானா தண்ணீர் திறக்கும் வரை போராட்டம் தொடரும்.
டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி மாநில அரசு விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில்தான் நேற்று டெல்லி மாநில மந்திரி அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்து விடக்கோரி காலைவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிஷி கூறியதாவது:-
இது என்னுடைய 2-வது உண்ணாவிரத நாள். டெல்லியில் மிகவும் மோசமான வகையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெற்று வருகிறது. டெல்லி மாநிலம் 1005 எம்ஜிடி (ஒரு நாளைக்கு மில்லியன் கலோன்ஸ்) பெற்று மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.
அரியானா மாநிலம் இதில் 613 எம்ஜிடி தான் வழங்க வேண்டும். சில வாரங்களாக அரியானா மாநிலம் 513 எம்ஜிடிதான் வழங்குகிறது. இதனால் 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெற முடியாமல் உள்ளனர்.
எல்லாவகையிலும் நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அரியானா அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்ட நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதை தவிர வேறு வழியில்லை.
டெல்லி குடிநீர் வாரியத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது குடிநீர் பிரச்சினை இன்னும் தொடர்வதாக தெரிவித்தனர். நேற்று 110 எம்ஜிடி குறைவாக அரியானா சப்ளை செய்தது. 28 லட்சம் மக்கள் தண்ணீர் பெறும் வகையில் அரியானா தண்ணீர் திறந்து விடும்வரை என்னுடைய உண்ணாரவிரதம் தொடரும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.