search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "owners"

    • கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.
    • கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டடுசேரி ஊராட்சி, புத்தூர், குடிகாடு கிராமத்தில் தமிழக அரசு விதிப்படி மணல் அள்ளப்பட்டு வருகிறது.

    இந்த மணல் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இருந்தும் பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு மணல் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

    கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் நடப்பு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை டிராக்டர் எளிமையாக கிடைக்கப்பெற்றது. தற்போது டிராக்டர் மணல் கிடைப்பதில்லை.

    ஆகவே மீண்டும் டிராக்டரில் மணல் வேண்டி கனிம வள அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட டிராக்டர் உரிமையாளர்கள் சென்று முறையிட்டதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    எனவே மணல் குவாரியில் டிராக்டரில் மணல் அள்ள அனுமதிக்க கோரி வருகின்ற 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணல் குவாரி முன்பு மறியல், முற்றுகை போராட்டம் நடத்துவதென கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு குறு கட்டுமான பணியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.

    • தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது
    • சங்க தலைவர் சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ்நாடு பலா பழம் கமிஷன் மண்டி உரிமையாளர்கள் நல சங்கம் தொடக்க விழா நடந்தது சங்க தலைவர்சி. ஆர். மாயவேல் விழாவிற்கு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கே.பாலமுருகன்மு ன்னிலை வகித்தார். செயலாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். கவுரவ தலைவர் சூசைமரி சங்கப் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணைச் செயலாளர் கே .ஆர். விஜயகுமார், பொருளாளர்ஏ.டி. சுந்தரமூர்த்தி, தியாகி டிரான்ஸ்போர்ட் அதிபர் காமராஜ் மற்றும் புதிய நிர்வாகிகள் பலா கமிஷன் மண்டி அதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

    கூட்டத்தில் பலா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். விவசாயிகள் பலா காய்களை பலா மார்க்கெட்டில் பலா கமிஷன் மண்டி மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.சங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி,மாமுல்,மேஸ்திரி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். கூலி, மாமூல் ஆகியவைகளை வியாபாரிகளிடம் கேட்கக் கூடாது. பலா கமிஷன் மண்டிஉரிமையாளர்க ளிடம் மட்டும் கேட்டுவாங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள்நி றைவேற்றப்பட்டது. முடிவில்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்குசங்க அடையாள அட்டைவழங்கப்பட்டது.

    • தென் மண்டல பட்டியலின பட்டியல் பழங்குடி எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமை யாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மாருதி நகா் சங்க அலு வலகத்தில் நடை பெற்றது.
    • எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

    நாமக்கல்:

    தென் மண்டல பட்டியலின பட்டியல் பழங்குடி எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமை யாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மாருதி நகா் சங்க அலு வலகத்தில் நடை பெற்றது. அதன் தலைவா் எஸ்.அகிலன் தலைமை வகித்தாா்.

    இதில், கடந்த 2018-2023 காலக்கட்டத்தில் தேவைக்கு அதிகமாக வாகனங்களை எண்ணைய் நிறுவ னங்கள் எடுத்ததால், 5 ஆண்டுகளில் மாதம் 1,000 கி.மீ. தூரம் கூட இயக்காத நிலையில் ஒரு டேங்கா் லாரிக்கு ரூ.36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது.

    இனிவரும் ஆண்டு களில் ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது குறைந்தபட்சம் ஒரு டேங்கா் லாரியை 5,000 கி.மீ. தூரம் இயக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும்.

    காலாண்டு சாலை வரி, தேசிய அனுமதி வரி, வாகன தகுதி சான்றிதழ், காப்பீட்டுத் தொகை, வாகனத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒப்பந்தக் கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும். சுங்க கட்டணமாக மாதம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டியது உள்ளதால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, சுங்கக் கட்டணத்தை எண்ணை நிறுவனங்கள் தனியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சட்ட ஆலோசகர் பேராசிரியர் மு.பெ.முத்துசாமி, செயலாளர் குணசேகரன், பொருளாளர் சத்திய மூத்தி, துணைத் தலை வர் காசிநாதன், துணைச்

    செயலாளர் சுப்பிர மணியன் ஆகியோா் கலந்து கொண்டனர்.

    • நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட ஜல்லி கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றும்,சுற்றுச் சூழல் மற்றும் கனிம வளத் துறை அனுமதி பெற்றும், குவாரியிலிருந்து உரிய நடைச்சீட்டு பெற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கல்குவாரி தொழில் செய்து வருகின்றோம். கல்குவாரியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சாலை பணி, அரசு கட்டிட பணி மற்றும் இதர அத்தியாவசிய கட்டிட பணிகளின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. அனைவரும் அரசிற்கு செலுத்தும் பர்மிட் கட்டணம், சீனியரேஜ் தொகை மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டண தொகையையும் செலுத்தி வருகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறோம். மேலும் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூபாய் பல கோடி கடன் பெற்று மாத தவணைகள் செலுத்தி வருகிறோம். இத்தொழில் மூலம் நேரடியாக 5 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக 50 ஆயிரம் குடும்பங்களும் பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலர் அரசு அலுவலகங்களுக்கு சென்று கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் குறித்து தவறான செய்திகளை புகார் மனுவாக கொடுத்து வருகின்றனர்.கல் குவாரி உரிமையாளர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறாக பணம் பறிக்கும் நோக்கத்தில் பொய்யான புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கொடுத்தும், மேலும் எங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனால் எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை தொடர்கிறது. சட்டபூர்வமாக உரிமம் பெற்று தொழில் செய்து வரும் எங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பணம் பறிக்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் என்கிற போர்வையில் மிரட்டல் போக்கை கையாளுகின்றனர். அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பரமத்திவேலூர்:

    அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம்  கூறியதாவது:

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.

    டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.

    பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு  வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.

    சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

    லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.

    மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு துணிக்கடை, பழக்கடை, சிக்கன் கடை என 30-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் வனத்துறை அலுவலக குடியிருப்பு பகுதியில் புதிதாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தாங்களாகவே கடைகளை அகற்றிக்கொள்கிறோம், அதிகாரிகள் அகற்ற வேண்டாம் என கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்களே கடைகளை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×